districts

img

பாஜக நிர்வாகி வீட்டில் ரூ.32 லட்சம் பறிமுதல்

திருப்பூர், ஏப்.14- காங்கேயம் அருகே பாஜக மாவட்ட நிர் வாகி வீட்டில் லட்சக்கணக்கில் பணம் பறி முதல் செய்யப்பட்டது.  திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், தீத்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜவகர். இவர் பாஜகவில் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டச் செயலாளராக உள்ளார். இவ ரது வீட்டில் லட்சக்கணக்கில் பணம் இருப் பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் சனியன்று சோதனை நடத்தப்பட்டது. இதில், வீட்டில் இருந்து ரூ.31 லட்சத்து 74 ஆயிரத்து 200 பறி முதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணத்தை காங்கேயம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்த னர். கோவை இதேபோன்று, கோவை மாவட்டம் முழு வதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் விதிமுறைகளை மீறி, உரிய ஆவண மின்றி கொண்டு செல்லப்படும் பணம், உடை  உள்ள பொருட்களை பறிமுதல் செய்யப்படு கின்றனர். இந்நிலையில், பாஜக கோவை நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை சூலூர் பகுதியில் பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில், அந்தப் பகுதியில் 2 ஆயிரம் பாஜகவின் சின்னம் மற்றும் வேட்பாளர் படம் அச்சிட்ட பனியன்களுடன் வந்த கார் பிடிபட் டது. பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.