districts

இரட்டிப்பு பணம் தருவதாக ரூ.15 லட்சம் ஆன்லைன் மோசடி

உதகை, டிச.30-  உதகையில் இரட்டிப்பு பணம் தரு வதாக கூறி ஐடி நிறுவன ஊழியர் களை ஆன்லைன் மூலம் மோசடி செய்த  கும்பலை உதகை சைபர் கிரைம் போலீ சார் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், உதகையைச் சேர்ந்த 31 வயது நபரும், குன்னூர் ஆழ் வார்பேட்டையைச் சேர்ந்த 41 வயது நபரும், தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலை யில், ஆன்லைன் மூலம் வேறு ஏதாவது  பணி உள்ளதா? என இருவரும் தேடி  வந்துள்ளனர். இதை தெரிந்து கொண்ட  மோசடி கும்பல் இவர்களுக்கு பகுதி  நேர ஆன்லைன் வேலை இருப்பதாக, இருவருக்கும் தனித்தனியாக வாட்ஸ்- அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பினர்.  இதை பார்த்த 2 பேரும் தங்களுக்கு பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் வேலை செய்ய தயார் என்று பதில் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த  நிலையில் அவர்களுடைய எண்ணுக்கு  டெலிகிராம் மூலம் லிங்க் அனுப்பி, ஆன்லைன் மூலம் வரும் ஊதியத்தை விட இதில் நீங்கள் பணம் முதலீடு செய் தால் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய இருவரும் தவணை முறையில் கூகுள்பே மூலம் 15 லட்ச ரூபாயை அனுப்பி உள்ளனர். ஆரம்பத்தில் அவர்களுக்கு இரட்டிப் பாகி கொஞ்சம் தொகை வந்தது. அதன்  பின்னர் எந்தவித பணமும் வரவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இருவரும்ம் தனித்தனியாக உதகை சைபர் கிரைம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில்,  வழக்கு பதிந்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.