திருவனந்தபுரம், ஏப். 9- புதுயுகப் பொருளான கிராபீன் உற்பத்தி மற்றும் மேம்பாட்டுக்குமான இந்திய கண்டு பிடிப்பு மையம், எர்ணாகுளத்தில் உள்ள வணி கத் தலைநகரில் (IICG) அமைய உள்ளது. இத்திட்டத்தை டிஜிட்டல் பல்கலைக்கழகம் மற்றும் மத்திய அரசு நிறுவனமான எலக்ட் ரானிக்ஸ் டெக்னாலஜிக்கான மெட்டீரியல் மையமும் இணைந்து செயல்படுத்தும். டாடா ஸ்டீல் லிமிடெட் வணிக பங்குதாரராக இருக்கும். இத்திட்டத்தில் 2டி மெட்டீரியல் பூங்காவும் இடம்பெற்றுள்ளது. முதல் ஐந்து ஆண்டுகளில் 250 புதிய உயர் தொழில்நுட்ப முயற்சிகள் இலக்கு. 50,000 பேர் நேரடியாகவும், இரண்டு லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். முதற்கட்டமாக ரூ.2,500 கோடி முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தாண்டு களில் ரூ.10,000 கோடி வர்த்தகம் நடை பெறும். இவை, ஆரம்ப முயற்சிகள் (இங்கு பேசன்), திறன் மேம்பாடு, பயிற்சி, ஆலோசனை, அறிவு பரிமாற்றம் மற்றும் தயாரிப்பு வணிகமயமாக்கல் ஆகிய துறை களில் இருக்கும். துகள் வடிவிலான ‘கிராபீன்’ அறிவியல் சமூகம் கிராபீனை மனித வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு அதிசயமாக பார்க்கிறது. இது வைரத்தை விட 40 மடங்கும், எஃகை விட 200 மடங்கும் வலிமையானது. மிகவும் மெல்லியது. உடை யாத கண்ணாடி போன்றது, மின் கடத்தியான கிராபீன் சிறப்பு பவுதீக, வெப்ப, மின்சார, ஒளியியல் பண்புகளை கொண்டுள்ளது. மின்னணு, தொழில், உற்பத்தி, கட்டுமான துறைகளில் கிராபீன் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஒன்றிய அரசால் அங்கீ கரிக்கப்பட்ட திட்டத்தின் ஆரம்பச் செயல் பாட்டிற்கு முதல் தவணையாக ரூ.15 கோயை கேரள அரசு ஒதுக்கியுள்ளது.