திருப்பூர், பிப்.15- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகக் கூட்டரங்கில் வியாழனன்று நடை பெற்ற கல்விக்கடன் சிறப்பு முகாமில் 23 மாணாக்கர்களுக்கு ரூ.1.68 கோடி மதிப் பீட்டில் வங்கி கல்விக்கடன் உதவிகளுக் கான காசோலைகளை சார் ஆட்சியர் சௌம்யா ஆனந்த் வழங்கினார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல் வேறு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாண வர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கனரா வங்கி மூலம் கல்லூரி படிப்பிற்கான கல்விக் கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகா மில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கல்விக் கடன் பெற முகாமில் பெற்றோர் களுடன் மாணவர்கள் பங்கேற்றனர். இம்முகாமில் கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, இந்தி யன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 14 க்கும் மேற்பட்ட வங்கிகள் கலந்து கொண்ட னர். இம்முகாமில் 200 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 23 மாணவர்களுக்கு ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் வங்கி கல்விக் கடன் உதவிகளுக்கான காசோலைகளை திருப்பூர் சார் ஆட்சியர் சௌம்யா ஆனந்த் வழங்கினார். மேலும், திருப் பூர் மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண் டில் ரூ.90 கோடி அளவில் 2060 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்க ளான தாட்கோ, மாவட்ட தொழில் மையத்தின் கடன் திட்டங்கள், பிரதம ரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவ னங்களுக்கான திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற் படுத்த அறிவுறுத்தப்பட்டது. சாலை யோர வியாபாரிகளுக்கான விண்ணப் பங்களை விரைந்து பரீசிலனை செய்து கடன் வழங்குமாறு அறிவுறுத்தப்பட் டது. மேலும், அரசின் காப்பீடு திட்டங்கள் குறித்தும், பிற வங்கி கடனுதவி மற்றும் சரியான முறையில் திருப்பி செலுத்துவ தன் நன்மைகள் குறித்தும் வாடிக்கையா ளர்களுக்கு வங்கிகள் மீதான குறை களை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இம் முகாமில் பெறப்பட்ட அனைத்தும் விண் ணப்பங்களும் பரீசிலக்கப்பட்டு விரைந்து கல்விக் கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில், மாவட்ட முன் னோடி வங்கி மேலாளர் ரவி, கலால் மேற் பார்வை அலுவலர் அ.கனிமொழி, கல் லூரி மாணாக்கர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.