districts

கோவை விமான நிலையத்தில் பாகுபாடு: வீடியோ வெளியிட்டு நடிகை குற்றச்சாட்டு

கோவை, ஜன. 19- கோவை விமான நிலையத்தில், வழக்கமான சோதனையின் போது தான் பாகுபாடுடன் நடத்தப்பட்டதாக பிக் பாஸ் நடிகை சனம் செட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு குற் றச்சாட்டியுள்ளார்.  திரைத்துறையில் 2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘அம் புலி’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங் கேற்று நடித்து வருகிறார்.  இந்நிலையில், விமான நிலையத் தில் மத ரீதியாக ஊழியர்கள் பாகு பாடு காட்டுவதாகத் தனது அதிருப் தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள் ளார். அந்த வீடியோவில் நடிகை சனம் ஷெட்டி பேசியதாவது, “கோவையி லிருந்து விமானம் மூலம் சென்னை  வந்தேன். வருத்தமான ஒரு நிகழ்வு  நடந்தது. விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் விமானம் ஏறுவதற்கு முன்பு என்னையும், 2  முஸ்லிம் நபர்களையும் தனியாக அழைத்து எங்களுடைய துணிகளை சோதித்தனர். என்னை என் பெயர் காரணத்தினாலும், அவர்கள் முஸ் லீம் ஆடைகள் அணிந்தவாறு இருந்த தாலும் இது போன்று நடந்து கொண் டனர். மொத்தம் 190 பயணிகள் இருக் கும் போது எங்களை மட்டும் தனியாக சோதித்தது மிகவும் அதிர்ச்சியளிக்கி றது. ஏன் எங்களை மட்டும் தனியாக அழைத்து சோதிக்கிறீர்கள். என்று கேட்டேன். வழக்கமான சோதனை தான் என்று பதில் சொன்னார்கள். இதை பார்க்கும் போது என்னுடைய கேள்வி என்னவென்றால், அந்த 190 பயணிகளும் எந்த உடமைகளும் எடுத்துப் போகவில்லையா. அவர் கள் எதுவும் எடுத்து வர வாய்ப்பில் லையா. வழக்கமான சோதனை என் றால், அணைத்து பயணிகளின் உட மைகளையும் சோதனை செய்தி ருக்க வேண்டும். எங்களை மட்டும் இப்படி மத ரீதியாக பாகுபாடு காட்டி சோதனை செய்வது எங்களைப் புண் படுத்துகிறது. முதலில் மத ரீதியான பாகுபாடுகளை நிறுத்த வேண்டும். இது எவ்ளோ பெரிய கேவலம்.” என பேசியுள்ளார். இந்த வீடியோ தற் போது வைரலாகி சர்ச்சையை ஏற்ப டுத்தியுள்ளது.

 பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சாதி, மத, மொழி, இன பாகு பாடு அதிகரித்து வருகிறது. அனைத்து துறையிலும், இந்த வன்மம் தொடர்ந்து வருகிறது.  இதேபோன்று, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலை யங்களில் இதுபோன்ற நடவடிக்கை கள் சமீப நாட்களாக அதிகரித்து வரு கிறது. ஏற்கனவே மதுரை விமான நிலையத்தில், நடிகர் சித்தார்த் தமி ழில் பேசினார் என்பதற்காக, அவ மானப்படுத்தப்பட்டதும், உடனடி யாக மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை  நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் தலையிட்டு கண்டனத்தை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.  அதேநேரத்தில், பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணா மலையும், பாஜகவின் தேஜஸ்வி சூர்யா எம்.பி.,யும் பயணத்த விமா னத்தின் அவசர கால கதவை தேஜஸ்வி திறந்துள்ளார். இதில், சுமார் ்மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விமானம் தாமதமாக புறப்பட்டது. சட்டப்படியாக நட வடிக்கை எடுத்து, சிறைக்கு அனுப்ப வேண்டியவர்களுக்கு, வெறும் மன்னிப்பு கடிதத்தை மட்டும் பெற்றுக் கொண்டு விடுவித்தது  நினைவு கூறத்தக்கது.