பென்னாகரம், ஜன.7- ஒகேனக்கல்லில் மீன் வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதி காரிகள் அழுகிய நிலையில் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த 500 கிலோ மீன் களை வெள்ளியன்று பறி முதல் செய்தனர். தருமபுரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று ஒகேனக்கல். இங்கு தினந்தோறும் பல்வேறு மாவட் டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வரு கின்றனர். இந்த சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம், ஆயில் மசாஜ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்துவிட்டு சுவையான மீன் குழம்பை ருசிப்பதற்க்காகவும் அதிகளவில் வருகின்றனர். இந்த மீன் குழம்பிற்காக மசாலாப் பொருட்களை அம்மியில் அரைக் கப்படுவதால் மீன் குழம்பை சுவை அலாதி யானது. இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் சமையலின் தரம் ஒருபுறம் குறைய தொடங் கியது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் புகார்கள் தெரிவித்து வந்தனர். இதையடுத்து மாவட்ட நியமன அலுவலர், பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் மாவட்ட மீன்வளத்துறை அலுவலர் கோகுல ராமன், உதவி இயக்குனர் உத்த ரவின் பேரில், ஒகேனக்கல் மீன்வள ஆய் வாளர் வேலுச்சாமி வெள்ளியன்று மீன் விற் பனை கூடம் பகுதியில் சோதனை மேற் கொண்டார். இச்சோதனையில் பல கடை களில் தரமற்ற நிலையில் அழுகிய 500 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தர மற்ற அழுகிய 500 கிலோ மீன்களும் உடனடி யாக மண்ணில் குழி தோண்டி புதைக்கப் பட்டன. இந்த சோதனை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறுவதால், சுற்றுலா பயணி கள் சுகாதார மற்ற மீன்களை உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இச் சோதனை குறிப்பிட்ட காலத்தில் நடத்தினால் சுற்றுலா பயணிகளின் ஆரோக்கியமும், வரு கையும் அதிகரிக்கும் என தெரிவித்தனர்.