districts

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.15 லட்சம் கொள்ளை

பொள்ளாச்சி, ஜன.21- பொள்ளாச்சி அருகே கல்குவாரி அதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.15 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக 7 பேரை கைது செய்த காவல் துறையினர், தலைமறை வான இருவரை தேடி வருகின்ற னர். கோவை மாவட்டம், பொள்ளாச் சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு காந்திநகரைச் சேர்ந்தவர் பஞ்ச லிங்கம். கல்குவாரி உரிமையாள ரான இவரது வீட்டில் கடந்த ஜன.15 ஆம் தேதியன்று சொகுசு காரில்  வந்த 5 பேர் வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து வருவதாக வும், தங்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ள னர். இதன்பின் வீட்டை  சோதனை  செய்து பீரோவில் இருந்த ரூ.15 லட்சம்  ரொக்கப் பணம் மற்றும் சிசி டிவி காட்சிகள் அடங்கிய ஹார் டிஸ்க்  உள்ளிட்ட பொருட்களை பறி முதல் செய்வதாக கூறி எடுத்துச் சென்றுள்ளனர்.  இதன்பின் விசாரிக்கையிலேயே நூதன முறையில் அவரது வீட்டில்  கொள்ளையடிக்கப்பட்டது அவ ருக்கு தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் பஞ்சலிங்கம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் 3  தனிப்படைகள் அமைத்து குற்ற வாளிகளை தேடி வந்தனர்.   இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கோவையைச் சேர்ந்த  பிரவீன் குமார் (36), மணிகண்டன் (37), மோகன் குமார் (30) மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த சதீஷ்குமார் (36), ஆனந்த் (47), தியா கராஜன் (42), ராமசாமி (47) உள்ளிட்ட 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.3  லட்சம் பணம் பறிமுதல் செய்யப் பட்டது. மேலும், தலைமறைவாக மேத்யூ, மகேஸ்வரன் ஆகிய இரு வரை காவல் துறையினர் தீவிரமாக  தேடி வருகின்றனர்.