திருப்பூர், ஜூன் 29 – சாலையோர வியாபாரிகள் ஏற்க னவே வியாபாரம் செய்யும் இடங்க ளில் தொடர்ந்து கடை அமைத்து வியா பாரம் நடத்த அனுமதிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபா ரிகள் சங்கம் கோரியுள்ளது. புதன்கிழமை சாலையோர வியாபா ரிகள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சிஐ டியு சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி.பாலன் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனுவில் கூறப் பட்டு இருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி பல்லடம் ரோடு உழவர் சந்தை பகுதிகளில் பல ஆண்டு காலமாக சாலையோர வியாபா ரிகள் ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் மற்றும் இதர பழங்களை தரையில் வைத்து அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை வியாபாரம் செய்து வருகி றார்கள். போக்குவரத்துக்கு இடையூறு இன்றி செயல்பட்டு வருகின்றனர். எனி னும் உழவர் சந்தைக்கு நூறு மீட்டர் தூரம் தள்ளி வியாபாரம் செய்ய அறி விப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. சந் தைப்பேட்டை மற்றும் உழவர் சந்தையி னுள் விற்கப்படும் பொருட்களை இந்த வியாபாரிகள் விற்பனை செய்வ தில்லை. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுக ளின் அறிவிப்புகளின்படி சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக் கீடு செய்துதர வேண்டும். அதுவரை ஏற்கெனவே வியாபாரம் செய்த இடங்க ளிலேயே தொடர்ந்து கடை அமைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி. பாலன் கேட்டுக் கொண்டு உள்ளார்.