திருப்பூர், ஜன.31- திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் ஸ்ட்ரீட் வென்டார் கமிட்டி அமைக்க வேண்டும் என சாலையோர வியாபாரி கள் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர் ஆகியோரிடம் மனு அளித்துள்ள னர். இதுகுறித்து சிஐடியு திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.பாலன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பல்லடம் சாலை தெற்கு உழவர் சந் தைக்கு 150 மீட்டர் தொலைவில் சாலை யின் ஓரத்தில் பழங்களை வைத்த சாலை யோர வியாபாரிகள் தினசரி காலை 4 மணி முதல் 8 மணி வரை வியாபாரம் செய்து வருகின்றனர். தினம் தோறும் அதில் கிடைக்கின்ற வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்ற னர். உழவர் சந்தையில் விவசாயிகளால் விற்பனை செய்யப்படும் பொருட் களோ, காய்கறி மார்க்கெட்டில் விற் பனை செய்யப்படும் காய்கறிகளோ விற்பனை செய்வதில்லை. மேலும், காய்கறி மார்க்கெட்டில் இருந்து 150 மீட் டர் தள்ளி ஓரமாக போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும், காய்கறி வியாபாரிகள் சிலர் முக்கிய சாலையில் உள்ள கடைகளை வாடகைக்கு பிடித்து அதன் முன் பகுதி யிலும் வியாபாரம் செய்து வருகின்ற னர். சந்தை கடையிலிருந்து 150 மீட்டர் தள்ளி வியாபாரம் செய்து வரும் சாலை யோர வியாபாரிகளால் உழவர் சந்தை விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை மேலும் போக்குவ ரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படுவ தில்லை. இந்நிலையில் வியாழனன்று அதிகாலை உழவர் சந்தையில் வியாபா ரம் செய்யும் சிலர் அரசின் உழவர் சந்தை விதிகளுக்கு மாறாக பல்லடம் சாலை யில் உழவர் சந்தைக்குள் செல்லாமல் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக் கும் இடையூறு ஏற்படுத்த முயன்றது அதிர்ச்சி அளிக்கிறது. சாதாரண ஏழை எளிய சாலையோர வியாபாரிகளுக் கும், காய்கறி வியாபாரிகளின் வாழ்வா தாரத்தை பாதிக்கும் வகையில் சில வியாபாரிகள் செயல்படுவது பொருத்த மானதல்ல. அரசு தலையீடு செய்து சுமூ கமான நிலையை உருவாக்கிட வேண் டும். மேலும், உயர்நீதிமன்றம் மேற்படி ஒரு வழக்கில் சாலை ஓரத்தில் வியாபா ரம் செய்கின்றவர்களுக்கு திருப்பூர் மாந கராட்சி நிர்வாகம் ஸ்ட்ரீட் வென்டர் கமிட்டி அமைக்க வேண்டும் என்றும், பின்பு அந்த கமிட்டியின் ஆலோசனைக ளையும் கருத்தில் கொண்டு அவர்க ளுடைய தொழிலுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. எனவே சாரையோரத்தில் வியாபாரம் செய்ப வர்களுக்கு ஸ்ட்ரீட் வென்டர் கமிட்டி அமைக்க வேண்டும். சந்தை கடையிலி ருந்து 150 மீட்டர் தொலைவில் மாநக ராட்சி வைத்துள்ளபடி அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை வியாபாரம் செய்து கொள்கிறோம் எனவே சாலை யோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப் பட்டுள்ளது.