சேலம், ஜூலை 19- ஏற்காட்டில் சாலையோரம் கடைகள் வைக்க நகர்ப்புற அமைச் சர் வாக்குறுதி அளித்த நிலையில், அதனை அமல்படுத்தாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், தொடர்ந்து கடைகளை வைக்க அனுமதிக்க வலியுறுத்தியும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் முக்கிய சுற்று லாத் தலங்களில் ஒன்றாக சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு விளங்கி வருகிறது. தினமும் 5 ஆயிரத்திற் கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணி கள் ஏற்காட்டிற்கு வந்து செல்கின்ற னர். சுற்றுலாப் பயணிகளின் தேவை யையொட்டி ஏற்காடு ஒண்டிக் கடை, படகு இல்லம், அண்ணா பூங்கா ஆகிய பகுதிகளில் சாலை யோர சிறு கடைகள் பல வருடங்க ளாக செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக சாலையோரம் கடைகள் வைக்க சேலம் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து கடை களை அப்புறப்படுத்தியது. இத னால், இந்த சாலையோர சிறு கடை களை நம்பி வாழ்க்கை நடத்தி வந்த 300க்கும் மேற்பட்ட சிறு வியாபாரி கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கடை வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்காததால் இந்த வியாபாரிகளின் வாழ்வாதா ரம் முழுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த மே மாத இறுதியில் ஏற்காடு கோடை விழா நடப்பதற்கு முன்பாக நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடை பெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஏற்காடு சாலையோர வியாபாரி கள், கடை வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதி யளித்தார். ஆனால், கோடை விழா முடிந்து இரண்டு மாதங்கள் கடந்த பின்பும், ஏற்காட்டில் சாலையோரம் கடைகள் வைக்க மாவட்ட நிர்வா கம் அனுமதி மறுத்து வருகிறது. மேலும், வியாபாரிகள், அதிகாரி கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது வாடிக்கை யாக உள்ள நிலையில், சாலை யோர வியாபாரிகள் பெரும் இன்ன லுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட நிர்வா கத்தின் இந்த அலட்சிய போக்கை கண்டித்து சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்ட தலை வர் விஜயலட்சுமி தலைமை வகித் தார். இதில், சிஐடியு மாவட்ட செய லாளர் டி.உதயகுமார், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வைரமணி, மாவட்ட துணைச்செயலாளர் ஏ. கோவிந்தன், சி.கருப்பண்ணன், ஜவுளி சங்க செயலாளர் பி.இராம மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், போக்குவரத்து சங்க துணைச்செயலாளர் செந்தில் குமார், சாலையோர வியாபாரிகள் சங்க பொருளாளர் கார்த்திக் உள் ளிட்ட ஏற்காடு சாலையோர வியா பாரிகள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.