உதகை, ஜூன் 3- நீலகிரி மாவட்டத்தில் கனமழை யால் சாலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையால் இதமான காலநிலை நிலவி வருகி றது. உதகை மற்றும் அதன் சுற்றுப் புற பகுதிகளில் வியாழனன்று காலை முதலே வானம் மேகமூட்டத் துடன் காணப்பட்டது. இதைத்தொ டர்ந்து மழை பெய்ய தொடங்கியது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால், தாழ்வான பகுதி களில் மழைநீர் தேங்கியது. விவ சாய நிலங்கள் மற்றும் சாலையின் ஓரங்களில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற் குள்ளாகினர். மேலும், தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்த தால், மக்களின் இயல்புநிலை பாதிக் கப்பட்டது. மேலும், குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வண்டி சோலை, எடப்பள்ளி, வெலிங்டன், காட்டேரி, அருவங்காடு உள்பட பல பகுதிகளிலும் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதன் காரணமாக குன்னூர் பேருந்து நிலைய சாலை உட்பட முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெ டுத்து ஓடியது.
இதனால் வாகன ஓட் டிகளும் மிகவும் சிரமம் அடைந்த னர். சில குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததையடுத்து தகவ லறிந்த அதிகாரிகள் விரைந்து சென்று நீரை வெளியேற்ற நடவ டிக்கை எடுத்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் மழை பெய் தது. தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிக ரிக்க தொடங்கியுள்ளது. அந்தரத்தில் தொங்கும் வீடு பந்தலூர் அருகே உள்ள உப் பட்டி பகுதியிலும் கனமழை பெய் தது. இதன்காரணமாக மேஸ்திரி குன்னுவில் குடியிருக்கும் ஆனந்த் என்பவரின் வீட்டின் முன்பு மண்சரிவு ஏற்பட்டது. இதனால் வீட்டின் தடுப் புச்சுவரும், மண்ணில் புதைந்தது. அப்போது வீட்டில் இருந்த அனை வரும் அங்கிருந்து வெளியேறி உயிர் தப்பினார். தற்போது அந்த வீடு அந்தரத்தில் தொங்குகிறது. இதனால் எப்போது வேண்டுமானா லும் இடியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மண்சரிவு ஏற்பட்ட இடத்தை தாசில்தார் நடேசன், வரு வாய் ஆய்வாளர் தேவராஜ், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து மற் றும் அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர்.