திருப்பூர், ஆக. 30 - தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் 8ஆவது மாநில மாநாடு செப்டம்பர் 8, 9 தேதிக ளில் உடுமலைபேட்டையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டை சிறப்பாக நடத் துவென்று சங்கத்தின் மாநில செயற் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்து சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் உடுமலை அரசு ஊழியர் சங்க கட்டிடத் தில் மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரம ணியன் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது உடுமலைப்பேட்டை எஸ்.வி.புரம் விஜயா மஹாலில் சாலை பணியாளர் சங்கத்தின் 8-ஆவது மாநில மாநாடு நடைபெற உள்ளது இம்மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங் கேற்க உள்ளனர் பிரதிநிதிகள் மாநாட் டில் சாலை பணியாளர் சங்கத்தின் கடந்த கால செயல்பாடுகள் எதிர்காலத் தில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்த வேலை அறிக்கை பற்றி சங்க மாநிலப் பொதுச்செயலாளரும், வரவு செலவு அறிக்கை பற்றி சங்கத்தின் மாநிலப் பொருளாளர் இரா.தமிழ் ஆகி யோர் முன்வைத்தனர். மாநில செயற் குழுவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் எ. ராணி, அரசு ஊழியர் சங்க மடத்துக் குளம் வட்ட கிளைப் பொருளாளர் ஜி. ராஜேந்திர பூபதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர் மாநில செயற்குழுவில் தமிழகம் முழுவதும் இருந்து 75க்கும் மேற்பட்ட சங்கத்தின் கோட்டத் தலைவர், கோட்டச் செயலாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் கள் பங்கேற்றனர் சங்கத்தின் மாநில துணைத் தலை வர்கள் து.சிங்கராயன் கா.ரவி தி.ராஜ மாணிக்கம், மாநிலச் செயலாளர்கள் கு.பழனிசாமி,கோ.ஹரிபாலகிருஷ் ணன், மா.மகாதேவன், சு.செந்தில்நா தன் செ.சையதுயூசுப்ஜான் ஆகியோர் பங்கேற்றனர் செப்டம்பர் 9 ஆம் தேதி உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவல கம் முன்பிருந்து சாலை பணியாளர் கள் குடும்பத்துடன் பேரணியாக உடு மலைப்பேட்டை நகரத்தின் முக்கிய வீதி கள் வழியாக சென்று தாராபுரம் ரோடு தாஜ் தியேட்டர் எதிரில் மிகப்பெரும் பொது மாநாட்டு நிகழ்வுகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இம் மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்துவ தென்று செயற்குழு முடிவு செய்துள் ளது.