அவிநாசி, ஜூலை 24- 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண் டும் என சாலை பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் அவி நாசி 5 ஆவது கோட்ட மாநாடு தனி யார் திருமண மண்டபத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இரண்டா வது நாள் மாநாட்டில், சாலை பணி யாளர்களின் குடும்பத்துடன் பேரணி, வஉசி திடலில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில், உடுமலை துரைய ரசன் மக்கள் கலை குழு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாட்டிற்கு அண்ணாதுரை தலைமை ஏற்றார். மாநில செயலாளர் செந்தில்நாதன் மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, சாலை பணி யாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராணி உள்ளிட்டோர் வாழ்த்துரை யாற்றினர். 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண் டும். சாலை பணியாளர்களின் இறந் தோர் வாரிசுகளுக்கு கருணை அடிப் படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்க ளுக்கு ஆபத்து படி, நிரந்தர பயணப் படி மற்றும் சீருடை சலவைப் பெட்டி உள்ளிட்டவைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், கோட்டத் தலைவ ராக கருப்பன், துணைத்தலைவர்க ளாக அம்மாவாசை, சிவகுமாரன், செயலாளராக ராமன், இணைச்செய லாளர்களாக செல்வராஜ், விஸ்வநா தன், பொருளாளராக அண்ணா துரை, செயற்குழு உறுப்பினராக முத் துசாமி உள்ளிட்டோர் தேர்வு செய் யப்பட்டனர். மாநிலத் தலைவர் அமுல் ராஜ் மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார்.