ஈரோடு, மே 5- கோபி கோட்ட பொறி யாளரின் விதிமீறல் கண் டித்து தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணி யாளர்கள் சங்கத்தின் சார்பில் கோபி நெடுஞ் சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு வியாழனன்று தொடங்கிய போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. நெடுஞ்சாலை துறை கோபி கோட்ட பொறியாளரின் விதிமீறல் நடவடிக்கையைக் கண்டித்தும், ஒட்டுமொத்த முதுநிலை பட்டியலை விதிகளைப் பின்பற்றாமல் வெளியிடப்பட்டுள்ளதைக் கண்டித்தும், முரண்பாடுள்ள முதுநிலைப்பட்டியலை மாற்றியமைத்து வெளியிட வேண்டும். நம்பி யூர் உட்கோட்ட பணியாளர்களுக்கு மாநகர ஈட்டுப்படியினை விரைந்து வழங்க வேண்டும். மழை கோட்டு உள்ளிட்ட பாதுகாப்பு உபகாரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட தலைவர் என்.முருக வேல் தலைமையில் மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், கோபி வட்டாட்சியர் முன்னிலையில், சாலை பணியாளர் சங்க தலைவர்களான அ.அம்சராஜ், மா.பால சுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டு பேச்சு வார்த்தையில், உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, சாலை பணியாளர்கள் குடும் பத்தினருடன் போராட்டத்தை தொடர்கின் றனர்.