அவிநாசி, செப்.28- அவிநாசி அருகே காமநாயக்கபா ளையத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட சாலைப் பணிகள் இன்னும் முடிவடையாததால் பொதுமக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அவினாசி ஒன்றி யம், தெக்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட காம நாயக்கன்பாளையத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பயன்படுத்தும் சாலை காமநாயக்கன்பாளை யம் முதல் சூலூர் வட்டார எல்லை வரை மண் சாலையாக இருந்தது. இச்சாலையை தார்ச்சாலையாக மாற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கீழ் 2019-20 ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டு, கற்கள் கொட்டப்பட்டது. தற்பொழுது வரை மீதி பணி கள் ஏதும் நடைபெறாமல் கிடப்பில் போடப் பட்டுள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் சாலை பணிகளை விரைவில் முடித்து தரு மாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேநிலை தொடருமா னால் தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட் டபோது, 15 நாட்களுக்குள் சீரமைத்துத் தரு வதாக கூறியுள்ளார்.