districts

img

எம்.பி., நிதியில் சாலை பணி தொடக்கம்

திருப்பூர், ஜன.3- திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயனின் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் ஊத்துக்குளி பேரூராட்சி 13 ஆவது வார்டு ஊத்துக்குளி ஆர்.எஸ். வெள்ளைக்கவுண்டன் புதூர் தார்ச்சாலை புதுப் பித்தல் பணி துவக்க நிகழ்வு புதனன்று காலை நடைபெற்றது. ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பிரேமா  ஈஸ்வரமூர்த்தி பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஊத்துக்குளி பேரூராட்சி துணைத் தலைவர் வி.ஏ.சரவணன், கவுன்சிலர்கள் சரஸ்வதி, தனம், ஜெயந்தி, பழனிசாமி, வடுக பாளையம் ஊராட்சித் தலைவர் தங்கவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி பேரூராட்சி முன் னாள் தலைவர் ஆர்.குமார் உள்ளிட்டு ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.