districts

img

சாலை வரி உயர்வை ரத்து செய்திடுக

சேலம், நவ.28- சாலை வரி உயர்வை ரத்து செய்ய வேண் டும் என சேலம் மாவட்ட சாலை போக்கு வரத்து மோட்டார் தொழிலாளர் சங்கம் வலியு றுத்தியுள்ளது.  சேலம் மாவட்ட சாலை போக்குவரத்து மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் எட்டா வது ஆண்டு பேரவை சேலம் புதிய பேருந்து  நிலையம் வி.பி.சிந்தன் நினைவகத்தில்  சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கே.தியாக ராஜன் தலைமையில் நடைபெற்றது. ஈஸ் வரன் வரவேற்புரையாற்றினார். கோவிந்த ராஜ் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந் தார். பொதுச் செயலாளர் டி.முருகேசன் வேலை அறிக்கையையும், பொருளாளர் மூர்த்தி வரவு - செலவு அறிக்கையும் சமர்ப் பித்தனர். மாநில துணை பொதுச்செயலா ளர் வி.குப்புசாமி பேரவையை துவக்கி வைத்து உரையாற்றினார்.  10 ஆண்டுகளாக மோட்டார் தொழில் கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள் ளது. பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் மோட்டார் தொழில் பாதித்துள்ளது. இந்நி லையில், வாகன வரி மற்றும் சாலை வரியை உயர்த்தி இருப்பது கண்டனத்திற்குரியது. இதனை ரத்து செய்ய வேண்டும்  என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஆன் லைன் அபராதத்தை தடுத்து நிறுத்த வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநில உதவித்தலைவர் மூர்த்தி நிறைவுரையாற்றினார்.  இதில், சேலம் மாவட்ட சாலை போக்கு வரத்து மற்றும் மோட்டார் தொழிலாளர் சங் கத்தின் தலைவராக எஸ்.கே.தியாகராஜன், பொதுச்செயலாளராக பி.முருகேசன், பொரு ளாளராக எம்.மணிகண்டன் மற்றும் 10 செய லாளர்கள் 10 துணை பொதுச்செயலாளர் உள்ளிட்ட 23 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சீனிவாசன் நன்றி உரையாற்றினார்.