தருமபுரி, மே 16- கோட்டூர் மலை கிராமத் திற்கு 75 ஆண்டுகளுக்கு பிறகு சாலை அமைக்கும் பணிக்கு ஒன்றிய அரசு அனு மதி வழங்கியுள்ளதாக தரும புரி நாடாளுமன்ற உறுப்பி னர் செந்தில்குமார் தெரிவித் தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வட்டு வனஅள்ளி ஊராட்சியில் கோட்டுர் மலை கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இங்கு போதிய சாலை வசதி இல்லை. ஆகவே, நோய்வாய்ப்பட்டவர்கள், முதிய வர்கள், கர்ப்பிணி பெண்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி 4 கி.மீட்டர் தூரம் நடந்தே தூக்கி சென்று மருத் துவமனைக்கு அழைத்து செல்லும் அவ லம் உள்ளது. இந்நிலையில், கோட்டூர் மலைக்கு சென்ற தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், அம்மக்களிடையே பேசுகை யில், கடந்த 75 ஆண்டுகளாக ஒவ்வொரு தேர் தலின் போதும் சாலை அமைத்து அரசியல் வாக்குறுதி கொடுப்பதும், அதை மறப்பதும் தொடர்கதையாகி இருந்து வந்தது. இதனை யடுத்து, நான் முயற்சி மேற்கொண்டு ஒன்றிய வனத்துறை, சுற்றுசூழல் துறை, பசுமை தீர்ப் பாயம் உள்ளிட்ட 6 துறைகளில் சாலை அமைக்க அனுமதி பெற்றேன். அதனடிப்ப டையில் கோட்டூர் மலை அடிவாரத்திலிருந்து கோட்டூர் மலைமுகடு வரை சுமார் 4. கிலோ மீட்டர் தூரம் அகன்ற சாலை அமைக்க ஒன் றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரி வித்தார். முன்னதாக கிராம மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமாருக்கு நன்றி தெரி விக்கும் வகையில் மேளதாளம் முழங்க வர வேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் வட்டு வன ஊராட்சி மன்ற தலைவர் மாதம்மாள் கோவிந்தசாமி, திமுக கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மேற்கு மாவட்ட இளைஞர் அணி மகேஷ்குமார், கவுன்சிலர் கள் முத்துசாமி மற்றும் பொதுமக்கள் திர ளாக கலந்து கொண்டனர்.