சேலம், ஜூலை 30- மேச்சேரியில் நடைபெறும் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி யால் சாலை முழுவதும் கழிவுநீர் தேங்கியதை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி-தொப்பூர்-மேட்டூர்-பவானி ஆகியவற்றிற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை யின் விரிவாக்கம் பணிகள் தற் போது மேச்சேரி பகுதியில் நடை பெற்று வருகிறது. இச்சாலை யையொட்டி கழிவுநீர் கால்வாய் முறையாக கட்டப்படவில்லை. இத னால் கால்வாயிலிருந்து கழிவு நீர் வெளியேறி மேட்டூர் சாலை யில் 3 மாதங்களாக தேங்கி உள்ளது. இதனால் இச்சாலையில் செல்லும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். மேலும், சாலையில் கழிவுநீர் தேங்கி இருப்ப தால் தொற்றுநோய் அபாயம் ஏற் பட்டுள்ளது. இச்சாலையில், முக்கிய பிரமு கர்கள் சென்றால் மட்டுமே மேச்சேரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் லாரி மூலம் தண்ணீர் உறிஞ்சும் இயந்தி ரத்தை கொண்டு கழிவுநீர் அகற்றப் படுகிறது. ஆனால், நிரந்தர தீர்வு காண பேரூராட்சி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. எனவே, கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று மேச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மேச் சேரி ஒன்றியச் செயலாளர் ஜி. மணி தலைமை ஏற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட துணைத்தலைவர் பி.தங்கவேலு, பேரூராட்சி கவுன்சிலர் ஆர்.பழனி, கே.மாது, பி.பழனி, ஏ.அம்மாசி, முத்துசாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து கழிவுநீர் கால்வாயில் மூடி போடும் பணி நடைபெற்றது.