districts

img

சிபிஎம் சார்பில் சாலை அமைக்கும் போராட்டம்

சேலம், பிப்.29- தும்பிபாடி கிராமத்தில் பல ஆண் டாக சாலை இல்லாதததை கண்டித்து,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை அமைக்கும் போராட் டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், தும்பிபாடி கிரா மம் பகுதியில் பல ஆண்டு காலமாக, சாலை வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பல முறை ஊராட்சி நிர்வாகம், அரசு அதிகாரிகள் பலரிடம்  மனு அளித்தும், இதுவரை எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓமலூர் தாலுகா கமிட்டி சார்பில், வியாழனன்று சாலை போடும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் 13 அடி அகலம் 350 மீட்டர் நீளம் சாலை போடப்பட்டது. இந்த போராட்டத்திற்கு ஓமலூர் தாலுகா செயலாளர் என். ஈஸ்வரன்  தலைமை வகித்தார். மேலும், தும்பி பாடி பகுதி கிளைச் செயலாளர் முரு கன், செங்கனூர் கிளைச் செயலா ளர்கள் ஈஸ்வரன், தவமணி, கள்ளிக் காடு கிளைச் செயலாளர் சந்திரன், குண்டூர் கிளைச் செயலாளர்கள் சிவக் குமார், ஓஎஸ் துரைசாமி, பூசரிப்பட்டி கிளைச் செயலாளர் வரதராஜன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர், இந்த  போராட்டத்தில் கலந்து கொண்டனர்.