திருப்பூர் மங்கலம் சாலை குளத்துப்புதூர் அருகே அமைந்துள்ள அம்மன் நகர் பகுதிக்கான சாலை புதர் மண்டி உள்ளது.இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே அப்பகுதி பொதுமக்கள் இணைந்து செவ்வாய்கிழமையன்று காலை புதர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.