நாமக்கல், மார்ச் 14- ராசிபுரம் அருகே முறையாக குடிநீர் விநி யோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், போடிநாயக்கன்பட்டி ஊராட்சி, காந்திநகர் 1 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப் படவில்லை. முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், குடி நீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண் டித்து அப்பகுதி பொதுமக்கள் ராசிபுரம் - கொல்லிமலை பிரதான சாலை, ஓணான் கரடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் பேளுக்குறிச்சி காவல் துறையினர் போராட் டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை மேற் கொண்டனர். இதைத்தொடர்ந்து, குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி மன்றத் தலைவர் உறுதியளித்தார். இதன்பேரில் மறியலில் ஈடுபட்ட பொதுமக் கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.