அவிநாசி, ஜன.29- கருணைபாளையம், கவுண்டம் பாளையம் பொதுமக்கள் மற்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மங்கலம் சாலையில் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பா ளையம் ஊராட்சிக்குட்பட்ட மங்களம் சாலை பிரிவிலிருந்து கருணைபாளை யம் கிராமத்திற்கு செல்லும் வழியில் குடி நீர் குழாய் பதித்க்கும் பணிகளால் சாலை பழுதடைந்தது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் சாலையை சீரமைத்து தருமாறு வட்டார வளர்ச்சி அலுவலரி டம் கடந்த ஜூலை மாதம் மனு அளித்து ளனர். இம்மனு மீது எவ்வித நடவடிக்கை யும் எடுக்காததால் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆகஸ்ட் மாதம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதன் எதிரொலியாக சாலை பணிகள் மேற் கொள்ள பூமி பூஜை போடப்பட்டு பணிக ளும் மெதுவாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க கோரி டிசம்பர் மாதம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டி னர். இந்நிலையில் இன்னும் பணிகள் முடிக்கப்படாததால் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வேலாயுதம்பா ளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமியப்பன் தலைமையில் பிர தான மங்கலம் சாலையை திங்க ளன்று மறித்து சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையி னர், ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜெகதீ சன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்னும் 5 நாட்களுக்குள் சாலைப் பணிகளை முடித்து தருவ தாக உறுதி அளித்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத் தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன் றியக்கவுன்சிலர் முத்துசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜ், விவசாய சங்க ஒன்றிய நிர்வாகி முத்துரத்தினம், முன்னாள் கிளைச் செயலாளர் ஈஸ்வரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.