திருப்பூர், டிச.12- பொங்கலூரில் கே 10 அரசு நகரப் பேருந்தை முறையாக இயக்க கோரி அப்பகுதி மக்கள் திங்களன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொங்கலூர் ஒன்றியம் கண்டியன் கோவில் பகுதியில் அரசு பேருந்து கே10 நகர் பேருந்து காங்கேயம் கிளையில் இருந்து இயக்கப்படுகிறது. தற்போது ஆறு மாதங்களாக மாலை நேரங்களில் சரிவரப் பேருந்து இயக்கப்படாததால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற் றும் வேலைகளுக்கு சென்று வரும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின் றனர். முறையாக கே 10 பேருந்தை இயக்க கோரி பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால், திங்களன்று அப்பகுதி மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுக்கா குழு உறுப்பி னர் தங்கவேலு, மாவட்டக் குழு உறுப்பி னர் ஜீ.சம்பத், ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.சிவசாமி, விதொச ஒன்றிய செய லாளர் ஜி.சுந்தரம், விவசாய சங்கத்தின் ஒன்றியப் பொறுப்பாளர்கள், கிருஷ்ண மூர்த்தி கருங்காளிபாளையம் பாலு, மார்க்ஸ் ஆகியோர் பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் அரசுப் போக்குவ ரத்து காங்கேயம்கிளை மேலாளர் ஆகி யோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, பேருந்து முறை யாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக எழுதித் தந் ததையடுத்து சாலை மறியல் போராட் டம் கைவிடப்பட்டது.