districts

img

தரைக்கடைகளை அகற்ற நோட்டீஸ் தருவதா?

தாராபுரம், மே 16 - தாராபுரம் உழவர் சந்தை அருகே  முறையாக சுங்கம் செலுத்தி வரும்  தரைக்கடை காய்கறி வியாபாரி களை அகற்ற நகராட்சி ஆணையர் நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காய்கறி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாராபுரம் - பொள்ளாச்சி சாலை மற்றும் உழவர் சந்தை அருகே நக ராட்சி காய்கறி வியாபாரிகள் தரைக்  கடைகளை போட்டு விற்பனை செய்து வருகின்றனர். முறையாக நக ராட்சிக்கு சுங்கம் கொடுத்து வியாபா ரிகள் காய்கறி விற்பனையை மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலை யில் நகராட்சி ஆணையர் உழவர்  சந்தையைச் சுற்றியும், பொள்ளாச்சி  சாலையில் உள்ள தரைக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என நோட்டீஸ் அளித்தார். இதை கண் டித்தும், தங்கள் வாழ்வாதாரம் பாதிக் கப்படுவதாகவும், நகராட்சிக்கு சுங் கம் செலுத்தும் வியாபாரிகள் சுமார்  50 பேர் உழவர் சந்தையை முற்று கையிட்டு உழவர் சந்தை பொறுப்பு அலுவலரிடம் மனு அளித்தனர். வியாபாரிகள் அளித்த மனுவில்,  

விவசாயிகள் காலை 4.30 மணிக்கு  சொந்த தராசு மூலம் வாகனங்களில் காய்கறிகளை மொத்தமாக மளிகை கடை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாகவும், பொது மக்களுக்கு சில்லறையில் விற்பனை செய்வதை  தவிர்த்து மொத்த விற்பனையில் ஈடு படுகின்றனர். இதை தடுத்து நிறுத்த  வேண்டும். மேலும் உழவர் சந்தை யில் இருந்து 100 மீட்டர் தள்ளி தான்  விதிமுறைப்படி நாங்கள் காய்கறி  விற்பனை செய்கிறோம். எனவே தங் கள் வாழ்வதாரத்தை பாதிக்கும் நக ராட்சி ஆணையாளர் அளித்த நோட் டீசை திரும்பப்பெற வேண்டும், என  கூறப்பட்டிருந்தது.  உழவர்சந்தை நிர்வாகத்தின் சார் பில் விவசாயிகள் மொத்த வியாபா ரத்தில் ஈடுபடுவது குறித்து நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தனர். இதைத்தொடர்ந்து காய்கறி கடை வியாபாரிகள் நகராட்சி ஆணை யாளர் அளித்த நோட்டீசை வாபஸ்  பெற வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி பொள்ளாச்சி  சாலையில் உள்ள நகராட்சி மேல் நிலைப்பள்ளி அருகே மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில்  உழவர் சந்தைக்கு 100 மீட்ட ருக்கு அப்பால் சாலையோரத்தில் வியாபாரிகள் காய்கறிகளை விற் பனை செய்ய வேண்டும் என உடன் பாடு ஏற்பட்டது. இதையடுத்து நக ராட்சி காய்கறி வியாபாரிகள் கலைந்து சென்றனர்.