நாமக்கல், ஜூலை 4- கொல்லிமலையில் சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் செவ் வாயன்று பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், வளப்பூர் நாடு ஊராட்சிக் குட்பட்ட அறப்பளீஸ்வரர் கோவில் அருகில் 50க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி யில் கடந்த 5 மாதங்களாக ஊராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், குடிநீருக் காக அப்பகுதி மக்கள் ஆற்று நீரை பயன் படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சி சார்பில் குடிநீர் சிராக விநியோகம் செய்யப்படாததால் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, சீரான குடிநீர் வழங்க வேண்டும் என வளப்பூர் நாடு ஊராட்சி தலைவர், அலுவலர்களிடம் தெரி வித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆவேச மடைந்த பெண்கள் அறப்பளீஸ்வரர் கோவில் அருகில் காலிக்குடங்கள், சின் டெக்ஸ் டேங்களை சாலையில் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவலறிந்த வாழவந்தி நாடு போலீ சார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகி யோர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சாலை விரிவாக்க பணியால் சில இடங் களில் குடிநீர் குழாய் மாற்றியமைக்கபட்டு வருகிறது. எனவே, விரைவில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.