districts

img

சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி மறியல்

சேலம், மே 13- தலைவாசல் அருகே சாலை வசதி ஏற் படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி அப் பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்த மணிவிழுந்தான் ஊராட்சி, ராமா னுஜபுரம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட் சியர் செ.கார்மேகம் கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். இதனி டையே இந்த ஊராட்சிக்குட்பட்ட முட்டல் நடு நிலைப்பள்ளி எதிரிலுள்ள சாலையில் அமர்ந்து பெண்கள் திடீரென மறியலில் ஈடு பட்டனர். அப்போது அவர்கள், தங்கள் கிரா மத்திற்கு சாலை, தெருவிளக்கு, சாக்கடை  வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய் துதர வேண்டும் என வலியுறுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.  இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் உதவி ஆட்சியர் சரண்யா, மறியலில் ஈடுபட் டோரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இதன்பின், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததன்பேரில், பொதுமக் கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்ற னர்.