தருமபுரி, ஏப்.13- இலக்கியபட்டி ஊராட்சி மக்க ளின் நீர் ஆதாரமாக இருந்து வரும் பிடமனேரி ஏரியில் சாக்கடை நீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள் ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஊராட் சிகளில் இலக்கியம்பட்டி முதன்மை இருந்து வருகிறது. இந்த ஊராட்சி யில் 15 வார்டுகள் உள்ளது. பிடம னேரி, வி.ஜெட்டிஅள்ளி, நெல்லை நகர், மாந்தோப்பு உள்ளிட்ட பகுதி களில் சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் முக்கிய நீர் ஆதா ரமாக இலக்கியம்பட்டி ஏரி, பிடம னேரி ஏரி ஆகிய இரண்டு ஏரிகள் இருந்து வருகிறது. இதில் பிடமனேரி ஏரி 40 ஏக்கர் பரப்பளவில் இருந்து வந்தது. தற்போது ஏரியை சுற்றி ஒரு வர் 10 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். ஏரியின் நடுவே 2 திறந்தவெளி கிணறுகள் அமைத்து ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யபட்டு வரு கிறது. ஊராட்சி நிர்வாகத்தின் மெத் தன போக்கால் 10 வார்டுகளுக்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீரை இந்த ஏரியில் விடுவதால் கழிவு நீர் கலந்து சாக்கடை நிறைந்த ஏரியாக மாறி உள்ளது. ஆண்டு தோறும் அரசுக்கு மீன் பாசி விற்பனையில் 15 லட்சத்திற்கு மேல் வருவாயை ஈட்டி தரும் இந்த ஏரி தற்பொழுது ஆகாயத்தாமரை நிறைந்து பார்க்கும் இடம் எல்லாம் பிளாஸ்டிக் கழிவுகளும், பன்றிகளும் மேய்ந்து ஏரி மாசுபட்டு துர்நாற்றம் வீசி வருவதால், நோய் தொற்று பர வும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏரியை சுற்றி இருக்கும் பொது மக்களுக்கு நோய்த்தொற்றுகளுக்கு உள்ளாகி வருகின்றனர். பலமுறை முறையிட் டும் தீர்வு கிடைக்கவில்லை என வேத னையுடன் அப்பகுதி மக்கள் தெரி விக்கின்றனர். எனவே, இப்பகுதி மக்களின் பாது காப்பை கருத்தில் கொண்டு ஆக்கிர மிப்பு செய்யப்பட்ட 10 ஏக்கர் ஏரி நிலத்தை மீட்க வேண்டும். ஏரிக்கு பாதுகாப்பு வேலி அமைத்து தண் ணீரை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏரிக்கோடி பகுதி யில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அத னையும் சீர் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.