districts

img

சாலையில் கொட்டிக்கிடக்கும் மணல் விபத்து ஏற்படும் அபாயம்

தாராபுரம், ஜன.17- தாராபுரத்தில் பிரதான சாலையில் கொட்டிக்கிடக்கும் மணல் குவியலால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட் டுள்ளது. தாராபுரம் காவல்நிலையத்தில் இருந்து அலங்கியம் சிக்னல், பைபாஸ் பகுதிக்கு செல்ல பிரதான சாலையாகும். மேலும் கரூர், கோவை, மதுரை, திருப்பூர், ஈரோடு ஆகிய ஊர்களில் இருந்து தாராபுரம் நகருக்குள் வரும் இணைப்பு சாலையாகயும் உள்ளது. இந்நிலையில் தாராபுரம் பொன்னு நிலையம் அருகில் உள்ள பகுதியில் சிமெண்ட் தளம் அமைக் கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் ஓரம் மணல் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக பணிகள் நடைபெறாத நிலையில் சாலையின் ஓரம் இருந்த மணல் குவியல் சரிந்து சாலையின் பாதிய ளவுக்கு இறைந்து கிடக்கிறது. இதனால் காலை நேரத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் அலங்கியம் சிக்னல் பகுதியில் இருந்து நகருக்குள் இருசக்கர வாகனத்தில் வருப வர்களுக்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதுடன், விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் நகரின் பல பகு திகளில் கட்டுமான பணியை மேற்கொள்பவர்கள் சாலை யில் மணல் மற்றும் கட்டுமான பொருட்களை கொட்டி வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்வது வாடிக்கை யாக உள்ளது. ஆகவே, நகராட்சி நிர்வாகம் உடனடி நடவ டிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.