districts

img

பொதுக்கழிப்பிடம் அருகில் குழந்தைகள் மையம்

கோவை, ஜன.11- குழந்தைகள் மையத்தின் அருகே  செயல்பட்டு வரும் பொதுக்கழிப்பி டத்தால், குழந்தைகளின் ஆரோக்கி யம் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந் துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் உள்ள நந்தனார் காலனி பிரதான சாலையில், குழந்தை கள் மையம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே நகராட்சி பொதுக் கழிப்பிடமும் உள்ளது.  இந்த பொதுக்கழிப்பிடத்திலிருந்து வரக்கூடிய துர்நாற்றம், குழந்தைகள் மையத்தில் இருக்கக்கூடிய குழந்தை களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளை விப்பதாக அப்பகுதி பொதுமக்கள், பெற்றோர் புகார் கூறுகின்றனர்.இது சம்பந்தமாக பலமுறை புகார் அளித் தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை என கூறப்படுகிறது. மேலும்,  மழைக்காலங்களில் பொதுக்கழிப்பிட பகுதியிலிருந்து அதிகமான துர்நாற்றம் வருவதாகவும்,  குழந்தைகள் மைய ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, குழந்தைகளின் நலன் கருதி, இவ்விவகாரத்தில் நகராட்சி நிர்வாகம் தலையிட்டு, குழந்தைகள் மையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து தர  வேண்டும் என கோரிக்கை வைத்துள் ளனர்.