உடுமலை, மார்ச் 15- உடுமலை வட்டார கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் முறையாக சாக்கடை களை அகற்றாமல் உள்ளதால் காய்ச்சல் பர வும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடுமலை, குடிமங்கம் மற்றும் மடத்துக் குளம் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில், சாக்கடைகளை தூய்மைப்படுத்த போதிய ஊழியர்கள் இல் லாததால் பல இடங்களில் சாக்கடை மற்றும் தெருகளில் குப்பைகள் தேங்கி உள்ளன. தூய்மைப்படுத்தப்படாமல் உள்ள சாக்கடை களால் வேகமாக பரவி வரும் காய்ச்சல் மேலும் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து பொது மக்கள் தெரிவிக் கையில், எங்கு பார்த்தாலும் குழத்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சலு டன் மருத்துவமணைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். முறையாக குடிநீர் கிடைப்ப தில்லை. மேலும் சாக்கடை கழிவுகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக் கையும் எடுக்காமல் உள்ளது, என்றனர். இப்பகுதிகளில் வேகமாக பரவி வரும் காய்ச்சல் குறித்து பொது மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது இடங் களை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.