தருமபுரி, மே 5- தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவ தோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளதால், உடனடியாக தருமபுரி நகராட்சி நிர்வாகம் சரி செய்திட வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி நகராட்சி அலுவலகம் அருகில் ஒன்றிய அரசு நிறுவனமான தொலைபேசி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு தொலைபேசி தொடர்பாக தினந்தோறும் நூற்றுக்கும் மேற் பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இப்பகுதி யில் பல்வேறு தனியார் வணிக நிறுவனங்கள், வங்கி, பழக்கடைகள், தேநீர் கடைகள், அரசு அலுவலகங்கள் உள்ளதால் ஆயிரகணக் கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், தொலைபேசி நிலைய அலு வலகத்தை ஒட்டி சாக்கடை கழிவுநீர் கால் வாய் செல்கிறது. இக்கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி யுள்ளது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் அதிகளவில் உற் பத்தி ஆகிறது. இதனால், சுகாதார சீர்கேடால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள் ளது. இது குறித்து, நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என தொலைபேசி நிலைய ஊழியர்கள் தெரி விக்கின்றனர். எனவே, கழிவுநீர் கால்வாயை முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.