districts

img

குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்

உதகை, டிச.11- உதகை -குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பாலத்தின் அருகாமை சாலைகள் மேடு, பள்ள மாக உள்ளதால் விபத்து ஏற் படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றஞ் சாட்டி உள்ளனர். நீலகிரி மாவட்டம், உத கைக்கு கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து கூட லூர் மற்றும் கோவை வழியாக  தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து குன்னூர், கோத்தகிரி சாலை வழியாகவும் வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் உதகை, குன் னூர், மேட்டுப்பாளையம் சாலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படு கிறது. குறிப்பாக, சீசன் காலங்களில் ஆயி ரக்கணக்கான வாகனங்கள் படையெடுத்து வருவதால், குன்னூர் சாலை ஒருவழி பாதை யாக மாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதைத்தொடர்ந்து விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும், மற்ற சாலைகளில் தடை ஏற் பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும் வகையிலும் உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையை அகலப்படுத் தும் பணிகள் நடந்து வருகிறது. இதன்படி, ரூ.62 கோடியில் 10 மீட்டர் அக லத்திற்கு விரிவாக்கம் செய்யும் பணிகள் முடி யும் தருவாயில் உள்ளது. சமவெளி பகுதி யில் போல அனைத்து இடங்களும் ஒரே மாதிரி அகலப்படுத்த முடிவதில்லை. எங் கெல்லாம் இடம் உள்ளதோ அங்கு எல்லாம் அகலப்படுத்தி வருகிறார்கள்.  

இதன் ஒரு பகுதியாக உதகையிலிருந்து குன்னூர் வரை சிறு பாலங்கள் கட்டப்பட்டன.  இந்த பாலங்களின் அருகாமையில்  உள்ள மேடுகள், வேகத்தடை போல் காட்சி அளிக்கி றது. இதனால் அந்த வழியாக தினசரி செல் லும் ஆயிரக்கணக்கான வாகனங்களும் சிர மத்திற்கு உள்ளாகின்றன. உதகையிலிருந்து குன்னூர் வரை சுமார் 70 இடங்களில் இப்பா லங்கள் கட்டப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் வேகத்தடைகள் பள்ளங்களாக இருக்கிறது.  பாலம் கட்டி முடிந்த பின் அதன்மீது முறை யான தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவ தாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.  இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதி காரி கூறுகையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு  ஆங்கிலேயர்கள் உருவாக்கப்பட்ட பாரம்பரிய மிக்க இந்த வழித்தடம் கால மாற்றத்திற்கு  ஏற்ப தற்போது விரிவாக்கம் செய்யப்படு கிறது. தற்போது பாலம் கட்டும் பணிகள் தீவிர மாக நடப்பதால் இதில் கவனம் செலுத்த முடியவில்லை, ஆனாலும் டிசம்பர் மாத இறு திக்குள் பாலம் கட்டும் பணிகளும், அதன் மேல் புறமும் தார்ச்சாலை அமைக்கப்படும். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.