மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் கலவரம் மற்றும் பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து திருமூர்த்தி மலை செட்டில்மெண்ட் பகுதியில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் செல்வம், மாவட்ட பொருளாளர் மணிகண்டன், கமிட்டி உறுப்பினர்கள் செந்தில்குமார், முருகன், சடையப் பன் மற்றும் 17 ஆவது வார்டு உறுப்பினர் வாணீஸ்வரி மற்றும் மலை சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.