ராகி கூழ், கம்பஞ்சோறு, சோள அடை என்று சாப்பிட்டு வளர்ந்த நம் முன்னோர்கள் மருந்துவமனை வாசலை மிதிக்கும் அவசியம் இல்லா மல் இருந்தது. உணவே மருந்து என்று இருந்த நிலை மாறி இன்று மருந் தையே உணவாக உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் நமது உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம் தான் என்பது அனை வரும் ஒப்புக் கொள்ளக்கூடிய உண் மையாகும். ஆனாலும், நாக்குக்கு அடிமையாகி நமது பாரம்பரிய உணவுகளைத் தவிர்த்து அவசரமா கவும், ஆரோக்கியமற்றதாகவும் தயாரிக்கப்படும் துரித உணவுகளைச் உண்டு பலரும் அவதிப்பட்டு வரு கின்றனர். இதனால் சிறு வயது முதலே பல்வேறு ஆரோக்கியக் குறைபாடுகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சமீப காலமாக சிறு தானிய உணவுகள் குறித்த விழிப்பு ணர்வு ஏற்பட்டு வருவது நல்ல மாற்றமாகும். அதிலும், கம்பு, சோளம், ராகி, சாமை, தினை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனை யடுத்து சிறுதானியங்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். உடுமலை, குடி மங்கலம் வட்டாரங்களில் தென் மேற்குப் பருவமழை மற்றும் வட கிழக்குப் பருவமழைக் காலங்களில் மானாவாரியில் அதிக அளவில் சிறு தானியங்கள் சாகுபடி மேற்கொள்ளப் பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் சிறுதானியங்கள் புறக்கணிக்கப்பட்டு போதிய விலை கிடைக்காத நிலை ஏற் பட்டது. இதனால் பல விவசாயிகள் சிறுதானிய சாகுபடியைக் கை விட்டு விட்டனர். ஆனால் தற்போது மீண்டும் சிறுதானியங்களுக்கு மவுசு கூடி யுள்ளது. வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத னால் சிறுதானியங்களுக்கு நல்ல விலை கிடைக்கும் சூழல் உருவாகி யுள்ளது. பொதுவாக சிறுதானிய சாகு படிக்கு அதிக அளவில் தண்ணீர் தேவையில்லை. எனவே வறட்சியான பகுதிகளுக்கு ஏற்ற பயிராக சிறு தானியங்கள் உள்ளது. விதைப்பு சம யத்தில் விதை முளைக்கும் அளவுக்கு மண்ணில் ஈரப்பதம் இருந்தால் போதும். பின்னர் சரியான மழை இல்லாவிட்டால்கூட பயிர் பிழைத்துக் கொள்ளும். அதேநேரத்தில் போது மான அளவில் தண்ணீர் மற்றும் ஊட்டச் சத்துக்கள் கிடைக்கும்போது நல்ல மகசூல் கிடைக்கும். நாட்டு ரகங்கள் சாகுபடி செய்யும்போது பூச்சி, நோய் தாக்குதல் பெரிய அளவில் இருக்காது. கிளி உள்ளிட்ட பறவைகள் முற்றிய கதிர்களை சேதப்படுத்துவதுண்டு. ஆனாலும் பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய பூச்சியி னங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பறவைகளுக்குக் கொடுக்கும் கூலியாக அதனை நினைத்துக் கொள் ளலாம். சிறுதானிய சாகுபடியில் மட்டு மல்லாமல் அனைத்து விளைநிலங்க ளிலும் பறவைத் தாங்கிகள் அமைத்து பறவைகள் உட்காருவதற்கு வழி செய்து கொடுப்பதன் மூலம் பூச்சி தாக்குதலைத் தவிர்க்கலாம். சிறுதானிய சாகுபடியில் அறுவடை யின்போது அதிக எண்ணிக்கையில் கூலி ஆட்கள் தேவைப்பட்டது. ஆனால் ஆட்கள் பற்றாக்குறை நிலவி வந்ததும் பலரும் சிறுதானிய உற் பத்தியைக் கைவிடுவதற்குக் காரண மாக இருந்தது. ஆனால் அறுவ டைக்கு தற்போது நவீன இயந்திரங் கள் வந்து விட்டது. தேனும், தினை மாவும் சாப்பிட்டு வலுவுடன் வாழ்ந்த நம் முன்னோர்களைப் போல நமது வருங்கால சந்ததிகளும் வாழ சிறு தானிய உற்பத்தி நிச்சயமாக கை கொடுக்கும்.