திருப்பூர், நவ.22- திருப்பூர் மாவட்டத்தில் நடை பெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்க ளுடனான ஆய்வுக்கூட்டம் திங்களன்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு செயலர் மற்றும் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம். கருணாகரன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் முன்னிலையில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவ லகக் கூட்ட அரங்கில் அனைத்து துறை களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு செயலர் மற்றும் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம். கருணாகரன் தெரிவித்தாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு அர சின் சார்பில் செயல்படுத்தப்படும் திட் டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரி டையாக சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராம ரிப்புத்துறை, மீன் வளத்துறை, பால் வளத்துறை, கூட்டுறவுதுறை, மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நல வாரியம், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் பேரூராட்சி கள் ஆகிய துறைகளின் சார்பில் மேற் கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட் டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தங்கள் துறைக ளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி, திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன், ஜெய் நாரயணன், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அ.லட்சுமணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண் டனர்.