சேலம், ஜன.11- ஆத்தூர் அருகே ரயில்வே சுரங் கப்பாதை அமைப்பதை கைவிட்டு, மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே காட்டுகோட்டை வடசென்னி மலையில் பிரசித்தி பெற்ற பாலமுரு கன் சுப்ரமணிய சுவாமி கோவில், அறி ஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இதனருகில் சேலம் - விருதாச்சலம் ரயில் வழிப்பாதை யில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப் பதற்கான பணி தொடங்கப்பட்டுள் ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றனர். ரயில் பாதைக்கும் தென்புறம் சதாசிவபுரம், சார்வாய்புதூர், சாத் தப்பாடி, புனல்வாசல், ஒதியத்தூர், வளைமாதேவி. உள்ளிட்ட பகுதிக ளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் நிலை யில், சுரங்கப்பாதை அமைத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள் ளாவார்கள். அது மட்டுமல்லாமல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல் லூரியில் பயிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும், அப்பகுதியிலுள்ள உயர்நிலைப் பள்ளி, ஆரம்பப்பள்ளி பயிலும் மாண வர்களும் பாதிக்கப்படுவார்கள். மேலும், வடசென்னிமலை பாலசுப்பி ரமணியர் திருக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் நடைபெ றும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா வில் லட்சக்கணக்கான மக்கள் கூடு வார்கள். அவர்களும் மிகுந்த சிரமத் திற்குள்ளாவார்கள். எனவே, ரயில்வே சுரங்கப்பாதை அமைப் பதை கைவிட்டு மேம்பாலம் அமைத்து தர வேண்டும் எனக்கூறி, அப்பகுதி பொதுமக்கள் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு மனு அளித்த னர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக் கள் கூறுகையில், ரயில்வே சுரங்கப் பாதை அமைந்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு கரும்பு, மர வள்ளிக்கிழங்கு உள்ளிட்ட விவசாய பொருட்களை அரவை ஆலைக ளுக்கு கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே, சுரங்கப் பாதை அமைப்பதை கைவிட்டு மேம் பாலம் அமைத்து தர வேண்டும். இல் லையென்றால் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். இதுகு றித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜன.29 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும், என்றனர்.