கடலூர் மாவட்டம், பி.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்த ரேவதியின் கணவர் சுப்பிரமணியை சித்திரவதை செய்து அடித்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், காவலர் சௌமியன் ஆகியோரை பணியிட மாற்றம் செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வலியுறுத்தியும் கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமையில் நடந்த ஊர்வலத்தில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.