திருப்பூர், ஏப்.20- ஓய்வு பெற்ற அனைத்துத் துறை ஊழியர் களின் 2022ஆம் ஆண்டு மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவ லக வளாகத்தில் செவ்வாயன்று நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் வட்டக் கிளைத் தலைவர் மகுடேஸ்வரன் தலைமை வகித்தார். இதில் பழைய ஓய்வூ தியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டக் குளறுபடி களைக் களைய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஊத்துக்குளி வட்டக் கிளை செயலாளர் பாஸ்கரன், பல்லடம் வட்டக் கிளைச் செய லாளர் பழனிசாமி, ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்க மாவட்டத் தலைவர் பாலகிருஷ் ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறை வாக சங்கத்தின் மாவட்டத் தலைவர் க.சண் முகம் கோரிக்கைகளை விளக்கி உரையாற் றினார். இதில் அனைத்து துறை ஓய்வு பெற் றோர் திரளானோர் கலந்து கொண்டனர். அதேபோல், தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி பீர்ஜாபர் தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், நசுருதீன், நடராஜன், பெரிய சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.