கோவை, ஏப்.9- வைக்கம் போராட்டம் என்பது ஆலய நுழைவுக்கான போராட்டம் அல்ல என கோவையில் சனியன்று நடைபெற்ற நிகழ்ச்சி யில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு பேசி னார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் “ஒரே ஊரு ஒரே சுடுகாடு” என்னும் பிரச்சார இயக்க துவக்க விழா கோவையில் சனியன்று நடைபெற்றது. புரட்சியாளர் அம் பேத்கரின் 132 ஆவது பிறந்தநாளை முன் னிட்டு இந்த பிரச்சாரத்தை, ஓய்வுபெற்ற நீதி யரசர் கே.சந்துரு துவக்கி வைத்து பேசி யதாவது:
உடல் தானம் செய்திடுக
மார்க்சிஸ்ட்டுகள், இடதுசாரி சிந்தனை யாளர்களை பொறுத்தவரை தண்டனை என்கிற பெயரில் மனித உயிரை பறிப்பதை மறுக்கிறோம். அதேபோல, சுடுகாடு என்கிற ஒரு வடிவத்தில் சிந்தனைக்கு உட்படுத்துவ தினால், தங்களுடைய உடலை தானமாக வழங்குவது தான் பொருத்தமானது. அப் படி வழங்கப்படுகிற தானத்தின் மூலம் மருத் துவக்கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் மனித உடற்கூறாய்வு செய்து, மருத்துவம் பயின்று எதிர்கால சமூகத்திற்கு சிறந்த மருத் துவர்களாக திகழ்ந்தால், அதுதான் பொருத்த மானதாக இருக்கும், என்றார்.
வைக்கம் வரலாறு
தற்போது கேரளா மற்றும் தமிழ்நாடு அரசு கள் இணைந்து வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரு கிறது. வைக்கம் போராட்டத்தின் வரலாறு ஆலய நுழைவுக்கான போராட்டம் மட்டும் அல்ல. அது ஆலயங்கள் அமைந்திருக்கிற தெருக்களில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் நடந்து செல்வதற்கான போராட்டமாக நடைபெற்றது என்பதுதான் உண்மை. அதி லும் பிரிட்டிஷ் ஆட்சியில் உள்ள மாகாணங் களில் போராடுவதற்கும், சங்கம் சேர்வதற்கும் அனுமதி வழங்கப்படும் என்பது அங்குள்ள சமஸ்தானங்கள் நடைமுறையில் இருந்தது. இந்த போராட்டத்திற்கு இந்து சிற்றரசர்கள், திருவாங்கூர் மகாராஜா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார், அந்தப் பத வியை ராஜினாமா செய்து விட்டு போராட் டத்தை நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் காந்தியோடு ஏன் போராட்டம்? என்று வாதாடினர். போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்ற காங்கிரஸ் தலைவர்கள், இந்த கோரிக்கை நியாயமானது என்றாலும், இந்து தர்மத்தின்படி உள்ள நடைமுறைகளில் காந்தியை தலையிடக்கூடாது என தெரிவித் தனர்.
அமெரிக்காவிலும் அட்டூழியம்…
அமெரிக்காவின் சியாட் நகரில் பிஎஸ் 403 என்ற சட்டம் அமுலுக்கு வருகிறது. இந்த சட் டம் மக்களிடையே வேறுபாடு காட்டினால், குறிப்பிட்டு பேசினால் குற்றச்செயல் என தெரிவிக்கிறது. இந்தச் சட்டத்தை எதிர்த்து இந்தியாவிலிருந்து சென்று குடியுரிமை பெற்ற சாதி இந்துக்கள் எதிர்ப்பு தெரிவிக் கின்றனர். அங்கு ஒரு குழுவை உரு வாக்கி (ஹிந்து பவுன்டேசன்), இந்து மத சடங்குகளில் தலையிடக்கூடாது என்றும், தங்களுடைய மத நம்பிக்கை புண்படுவதாக தெரிவித்து, தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்கின்றனர். இந்தியாவில் இதுபோல சட் டங்கள் இருந்தாலும் அதனை பொருட் படுத்தாமல், தங்களுடைய வழக்கமான மத நம்பிக்கை அடிப்படையிலான தீண்டாமை முறைகளை தொடர்ந்து கடைப்பிடித்து தான் வருகின்றனர். இங்குள்ள அரசையும், காவல் துறையையும், சட்டங்களையும் புறந்தள்ளு வது அவர்களுக்கு வழக்கமான ஒன்றாகும். கலிபோர்னியாவில் நிற அடிப்படையில் வேறுபாடு காட்டினாலும், மத ஏற்றத்தாழ்வு கள் குற்றம் என்பது அமலில் உள்ளது. இந் தியாவில் உள்ள உயர்சாதி வகுப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இங் குள்ள மக்கள் தங்களுடைய பொருளாதா ரத்தை பெருக்க ஊறுகாய், மசாலா பொட்ட லங்களோடு, சாதியையும் கட்டி தூக்கிக் கொண்டு வெளிநாடுகளில் சென்று தீண் டாமை நடைமுறையை, சாதி ஏற்றத்தாழ்வு களை நடைமுறைபடுத்த முயற்சி செய்கின்ற னர். தீன்டாமை என்பது உள்நாட்டு, வெளி நாட்டு பிரச்சனை அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மின்மயானம் உள்ளதா?
சுடுகாடு பிரச்சனைகளை பேச துவங்கி னால், சில மேதாவிகள் இப்பொழுது மின்மயா னம் வந்துவிட்டது தானே, அங்கு அனை வரும் சமமாகதானே எரிக்கப்படுகின்றனர் என்ற கேள்வியை முன் வைக்கின்றனர். இவர் களுக்கு தெரிந்தது, மாநகரில் உள்ள இரண்டு அல்லது சில மின்தகன மேடைகள் உள்ளது மட்டுமே. அதில் எத்தனை பழுதடைந்து செயல் படாமல் இருக்கிறது என தெரியாது. நாடு முழுவதும் எத்தனை ஊராட்சிகள், ஒன்றியங் கள், கிராமங்கள் உள்ளது என்ற சிந்தனை இல் லாதவர்கள் உள்ளதை நாம் உணர வேண் டும். இப்படியாக பேசுவதன் மூலமாக சாதியை தாங்கிப்பிடிக்கின்ற பணியை செய்ப வர்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
சாதியை ஒழிக்க முடியும்
சாதி அடையாளத்தின் ஆணிவேராக இருப்பது அரசியல் அதிகாரம் என்று அம் பேத்கர் தெளிவாக குறிப்பிட்டு காட்டியுள் ளார். நம்முடைய நாட்டில் மதச்சார்பின் மையை உறுதி செய்வதற்கே கடினமான சூழல் நிலவுகிறது. அரசியல் சட்டம் அறம் அற்றது என ஆளுநர் பேசுகின்றார். ஐபிஎஸ், ஐஏஎஸ் படித்த அதிகாரிகள், சட்டத்தை குறைந்தபட்சம் கற்றிருக்க வேண்டிய அதி காரிகள், சானதனத்தை முன்நிறுத்தி பேசு வது, நடந்து கொள்கின்ற போக்கை நம் நாட் டில் காண முடிகிறது. பட்டியலின மக்கள் ஒடுக்கப்டுவதை எதிர்த்து போராட திட்டமிடப் படுகின்ற வேலையில், இந்து மநுதர்ம அடுக்கு முறையில் பிராமணர் அல்லாதவர்கள், பிரா மணிய அரசியல் அதிகார ஒழிப்பிலிருந்து தான் சாதி கட்டமைப்பை ஒழிக்க முடியும் என்பதை உணர வேண்டும். நம்முடைய நாட் டில் பட்டியலின மக்கள் அல்லாதவர்களுக்கு ஒரு அம்பேத்கர் தேவைப்படுகிறார். பட்டிய லின அல்லாதவர்கள் ஒருங்கினைக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது, என்றார்.