கோவை, மே.2- தமிழ்நாடு மின்வாரியத்தில் 35 ஆண்டு காலம் பணி யாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு மின்வாரியத்தில் 35 ஆண்டு காலத்திற்கு மேலாக கம்பியாளர், மின்பாதை ஆய்வாளர், முகவர் உள் ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவரும், சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் முன்னாள் மாநி லச் செயலாளர், கோவை மண்டலச் செயலாளர், தற்போது கோவை மாநகர கிளைத்தலைவராக இருந்து பணி ஓய்வு பெறும் டி.மதுசூதனன் மற்றும் மின்பாதை ஆய்வாளராக பணி யாற்றிய மாரியப்பன், இளமின் பொறியாளராக பணி யாற்றிய ராஜமாணிக்கம் உள்ளிட்ட மூவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா, கோவை பந்தயசாலை அருகில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நடைபெற் றது. தமிழ்நாடு மின்சார வாரிய கோவை மையக் கோட்ட செயற் பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்நாடு சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செய லாளர் எஸ்.ராஜேந்திரன், மண்டலச் செயலாளர் டி. கோபால கிருஷ்ணன், கோவை மாநகர கிளைச் செயலாளர் டி.மணி கண்டன், உள்ளிட்ட திரளான மின்வாரிய அலுவலர்கள் ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.