கோவை, செப்.12- மாவட்ட நிர்வாகத்தின் பழிவாங் கும் நடவடிக்கையை கண்டித்து செவ் வாயன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்கத்தினர் நூற்றுக் கணக்கானோர் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங் கத்தின் நிர்வாகிகள் சுதா, சுசீலா ஆகிய இருவரையும், மாவட்ட உதவி கணக்கு அலுவலர், பழிவாங்கும் நோக் கத்தோடு தற்காலிக பணி நீக்கம் செய் துள்ளார். மாவட்ட உதவி கணக்கு அலுவலர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியு றுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவர் கே.என்.ராமசாமி, மாவட்டச் செயலாளர் என்.பழனிசாமி, முன் னாள் மாநிலத் தலைவர் கே.பழனி சாமி, சத்துணவு ஊழியர்கள் சங்கத் தின் மாநில நிர்வாகிகளான பொதுச் செயலாளர் எ.மலர்விழி, மாநிலத் தலைவர் ஆர்.கலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத்தொடரந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர். இதனைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், கோரிக் கைகள் குறித்து விரைந்து தீர்வு எட்ட நடவடிக்கை மேற்கொள்வதாக உறு தியளித்தார். இதனையேற்று அனை வரும் கலைந்து சென்றனர்.