உடுமலை, ஜன.16- உடுமலைப்பேட்டை, பெரியகோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் உள்ள திரு வள்ளுவர் சிலைக்கு, கிருஷ்ணகிரி கூட்டுறவுத்துறை பதிவா ளர் தமிழரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர், விஜயலட்சுமி தலைமை தாங்கினார். வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் சிவக்குமார் வரவேற்றுப் பேசி னார். முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வராஜ், முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகேசன், பாலசுப்பி ரமணியம், துணைத்தலைவர் விஸ்வநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர் லிங்கசாமி முன்னாள் பொதுப்பணித்துறை அலு வலர் ராமதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.கிருஷ்ண கிரி கூட்டுறவுத்துறையில் பதிவாளராகப் பணியாற்றும் தமி ழரசு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திருவள்ளு வர் சிலைக்கு மாலை அணிவித்து, குழந்தைகளுக்குப் பரிசு களை வழங்கினார். சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் புவனேஸ்வரி கருத்துரை பேசினார். மாணவ, மாணவிகள் திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் குறித்துப் பாடல்களும் கவிதைகளும் பேசினர். இந்நிகழ்ச்சியில் இறுதியாக வரலாற்று ஆய்வு நடுவத்தின் இணைச்செயலாளர் ராபின் நன்றி உரை கூறினார். திருவள்ளு வர் திருக்கோட்டத்தின் பொறுப்பாளர்கள் பால் கென்னடி, அருட்செல்வன், அருள்கணேசன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிவசக்தி காலனி அரசு உயர் நிலைப்பள்ளி மாணாக்கர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.