districts

img

மாநகராட்சிகளில் ஒப்பந்த பணியாளர் நியமனம் அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய தீர்மானம்

ஈரோடு, அக்.31- மாநகராட்சிகளில் ஒப்பந்த பணியாளர் நியமனம் என்ற அரசின் முடிவை மறு பரி சீலனை செய்ய வேண்டும் என ஈரோடு மாநக ராட்சியில் ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தமிழகத்தில் உள்ள ஈரோடு உள்ளிட்ட 21 மாநகராட்சிகளிலும் நிரந்தர பணியாளர் எண் ணிக்கையை 90 விழுக்காடு குறைத்தும், வெளிக்கொணர்வு முகமை மூலம் ஒப்பந்த பணியாளர்களாக்கப்படும் என நகராட்சி நிர் வாகத்துறை அரசாணைகள் வெளியிட்டுள் ளது. இதனை சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார் பில் தனியார் மயம் கூடாது, ஒப்பந்த முறை யைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி வரும் நவ.3 ஆம் தேதியன்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையில் ஈரோடு மாநகராட்சியின் அவசர கூட்டம் திங்களன்று மேயர் நாகரத் தினம் தலைமையில் நடைபெற்றது. இதில், ஆணையாளர் சிவகுமார் மற்றும்  துணை மேயர் செல்வராஜ் உள்ளிட்ட மாமன்ற உறுப் பினர்களும், பொறியாளர்கள் உள்ளிட்ட அலு வலர்களும் கலந்து கொண்டனர். முன்ன தாக தூய்மை பணியாளர்கள் ஏராளமா னோர் மாமன்ற அலுவலக வளாகத்தில் உள் ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதனையடுத்து மாமன்ற கூட்டத்தில், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோரை ஒப்பந்த பணியாளர்களாக்கும் அரசா ணையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ள பணியாளர்களுக்கு ஆதர வாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என  உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதிமுக வினர் இதே கோரிக்கையை வலியுறுத்தி வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர். அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக  வலியுறுத்தியதால், மேயர் முதல்வர் கவ னத்திற்குக் கொண்டு சென்று அரசாணை களை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்து வோம் என்றார். இதனால் அதிமுகவினர் வெளிநடப்பை கைவிட்டு அவை நடவடிக்கை களில் கலந்து கொண்டனர். தொடர்ந்து பாதாள சாக்கடை, தெருநாள் தொல்லை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை களை எழுப்பினர். அவையில் விவாதித்து 30 பொருள்கள் ஏற்கப்பட்டது.