districts

img

மலைவாழ் பகுதி மக்களுக்கு தாமதமில்லாமல் சாதி சான்றிதழ் வழங்கிடுக

சேலம், பிப்.12- மலைவாழ் பகுதி மக்களுக்கு தாமதமில் லாமல் சாதி சான்றிதழ் வழங்க வேண்டு மென வாலிபர் சங்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் கல்வராயன் மலைப் பகுதியின் சிறப்பு பேரவை  கூட்டம் நடைபெற்றது. டி.தர்ம லிங்கம் தலைமையில் இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் சிறப்புரையாற்றினார்.  இதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். இதில் சங்கத்தின் தலை வராக சி.வெங்கடேஷ், செயலாளராக  டி.தர்மலிங்கம், பொருளாளராக சத்திய ராஜ் உட்பட 15 பேர் கொண்ட இடைக் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.  முன்னதாக, இப்பேரவையில் மலை வாழ் மக்களுக்கு தாமதமில்லாமல் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். வன  உரிமை பாதுகாப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். அடிப்படை வசதி களான சாலை, சாக்கடை, கழிப்பிட வசதி கள் செய்து தரவேண்டும். அனைத்து பகுதி களுக்கும் மயான வசதி அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது.