districts

img

சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதி செய்திடுக

சேலம், மார்ச் 4- சிறுபான்மை மக்களின் வழி பாட்டு உரிமையை உறுதி செய்ய  வேண்டுமென தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் சேலம் மாவட்ட 3ஆவது மாநாட் டில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள்  நலக்குழு சேலம் மாவட்ட 3ஆவது  மாநாடு சேலம் ஒய்எம்சிஏ ஹாலில்  மாவட்ட தலைவர் ஐ. ஞான சௌந்தரி தலைமையில் சனியன்று நடைபெற்றது.  ஜி. சுல்தான் வரவேற் புரை ஆற்றினார். மாநாட்டை மாநில துணைத் தலைவர் ப.மாரிமுத்து துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஜே. சேக் அப்துல்லா அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில செயலாளர் எம்.ஜெரோம்ரோட்ரிக்ஸ், சேலம் ஜாமியா மஸ்ஜித் முன்னாள் முத்த வல்லி எம். நாசர்கான் (எ) அமான், மகேந்திரா கல்வி நிறுவனங்கள் செயல் இயக்குனர் ஆர்.சாம்சன் ரவீந்திரன், புதுமடம் பாட்ஷா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங் கினர். மாநில பொது செயலாளர்  எம்.ராமகிருஷ்ணன் நிறைவுரையாற் றினார். இதில், சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும். தேவாலயம், மசூதியை கட்டிக் கொள்வதற்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும், மறுக்கும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர்கள் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.  மாநாட்டில் மாவட்ட தலைவராக ஆர்.வெங்கடாபதி, செயலாளராக ஐ.ஞானசௌந்தரி உள்ளிட்ட 15  பேர் கொண்ட சிறுபான்மை நல  குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.  முடிவில், டி.எஸ்.ஜோசப்  நன்றி கூறினார்.