சேலம், ஜூலை 26- பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்திட தீவிர கண்காணிப்பு மற் றும் நடவடிக்கைகளை மாவட்ட நிர் வாகம், காவல்துறை இனைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட மாநாடுகள் வலியுறுத்தியுள்ளனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சேலம் மாவட்ட 16 ஆவது மாநாடு சேலம் மாவட்டம் மேட்டூரில், தோழர்கள் மைதிலி சிவராமன், பிருந்தா நினைவரகத் தில் நடைபெற்றது. முன்னதாக மேட்டூர் கமிட்டியிலிருந்து பொன் னம்மா நினைவு ஜோதிப்பயணம் மேட்டூர் தாலுகா தலைவர் கே.சகுந் தலா தலைமையில் எடுத்துவரப்பட் டது. அதனை மாவட்ட துணைத் தலைவர் கே. பெருமா பெற்றுக் கொண்டார். இதேபோன்று பல் வேறு பகுதிதிகளில் இருந்து கொடி, கொடி மரம் பயணக்குழு மாநாட்டு திடலை வந்தடைந்தது. மாநாட்டின் கொடியை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.காவேரி அம் மாள் ஏற்றி வைத்தார். பிரதிநிதிகள் மாநாடு, மாவட்ட தலைவர் டி.பர மேஸ்வரி தலைமையில் நடைபெற் றது. வரவேற்பு குழு தலைவர் வி. இளங்கோ வரவேற்புரையாற்றி னார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட துணை செயலாளர் ஆர். வைரமணி முன்மொழிந்தார். மாநாட்டை மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி துவக்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் ஐ.ஞானசௌந்தரியும், வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் என். ஜெயலட்சுமியும் சமர்பித்தனர். மாநில செயலாளர் ஏ. ராதிகா நிறைவுறையாற்றினார். பின்னர் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் தலைவராக ஆர்.வைரமணி, செயலாளர் எஸ். எம். தேவி, பொருளாளர் கே. பெருமா, துணைச் தலைவர்களாக ஐ.ஞானசௌந்தரி, கே.ராஜாத்தி, டி.பரமேஸ்வரி, துணைச் செயலா ளர்களாக ஜி.கவிதா, சகுந்தலா உள்ளிட்ட புதிய மாவட்ட குழு உறுப் பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில், மேட்டூர் தாலுகா பொரு ளாளர் பி.மகாலட்சுமி நன்றி கூறி னார்.
நாமக்கல்
நாமக்கல் மாதர் சங்க மாவட்ட குழு அலுவலகத்தில் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க 8 ஆவது மாவட்ட மாநாடு செவ்வாயன்று நடைபெற்றது. இதற்கு மாதர் சங் கத்தின் மாவட்ட தலைவர் ஆர். திலகவதி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் கே. சரோஜா கொடியேற்றிவைத்தார். மாவட்ட பொருளாளர் எம்.செல்வ ராணி அஞ்சலி தீர்மானம் வாசித் தார். மாநிலத் துணைச் செயலாளர் ஜி.சாவித்திரி துவக்கி வைத்து பேசி னார். மாவட்டச் செயலாளர் ஆர். அலமேலு வேலையறிக்கை சமர் பித்தார். அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி அனுராதா வாழ்த்துரை வழங்கினார். இம்மாநாட்டில் மாதர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். இதில், மாவட்ட தலைவ ராக பி.ராணி, மாவட்ட செயலாள ராக ஆர்.அலமேலு, மாவட்ட பொரு லாளராக கே.புஸ்பலதா, துணை தலைவராக ஜீ.பழனியம்மாள், துணை செயலாளராக எம்.செல்வ ராணி உள்ளிட்ட 13 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யபட்டது. மாநாட்டை நிறைவு செய்து மாதர் சங்க மாநில துணைத்தலைவர் ஜி. ராணி சிறப்புரையாற்றினர். முடி வில் ஜீ.பழனியம்மாள் நன்றி கூறி னார்.
தீர்மானம்
மாதர் சங்கத்தின் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட மாநாடுகளில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதில், பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன் முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடத்திட்டத்தில் சமத்துவ கல்வி அளிக்க வேண்டும். மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங் களை தடை செய்து அரசு வங்கிக ளில் நான்கு சதவிகித வட்டியில் கடன் வழங்க வேண்டும். மின் கட் டண உயர்வை திரும்ப பெற வேண் டும். அத்தியாசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். கிராம ஊராட்சி களில் குடிநீருக்கு கூடுதல் கட்ட ணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பின்பு நிறுத்தப்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்து களை முழுமையாக இயக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட் சிகளில் பெண் பிரதிநிதிகளின் பணியை கணவர், தந்தை, மகன் போன்றவர்கள் நிர்வாக ரீதியாக தலையீடு செய்வதை தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். சமையல் கேஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும். முதியோர் ஓய்வூதியம் கேட்டு மனு செய்துள்ள அனைவ ருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண் டும். நீர்நிலை இடங்களில் பல்லாண் டுகளாக வசித்து வருபவர்களுக்கு மாற்றிடம் வழங்க வேண்டும். திருச் செங்கோடு ராஜா கவுண்டம்பாளை யம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.