districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நகராட்சி எல்லையை விரிவுடுத்த தருமபுரி நகர்மன்றத்தில் தீர்மானம்

தருமபுரி, ஜன.31- நகராட்சி எல்லையை விரிவுடுத்த வேண்டும் என தரும புரி நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் தலைவர் லட்சுமி நாட்டான்மாது தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் புவனேஷ்வரன், நகர்மன்ற துணைத் தலைவர் அன்பழகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நகராட்சி  இயக்குனரகம் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் ஊராட்சி களை இணைப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட் டது. மேற்படி அரசாணையின்படி தருமபுரி நகராட்சியை விரி வுபடுத்தும் வகையில் நகராட்சி எல்லையை ஒட்டி அமைந் துள்ள இலக்கியம்பட்டி, தடங்கம், ஏ.ஜெட்டிஅள்ளி, அதிய மான் கோட்டை, செட்டிக்கரை ஆகிய ஊராட்சிகள் முழுவதும் மேலும் ஏ.கொல்லஅள்ளி, சோகத்தூர், அளேதருமபுரி ஆகிய ஊராட்சிகளை முழுவதும் இணைத்து தருமபுரி நகராட்சியை விரிவுபடுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதல் அளிக் கப்பட்டது. மேலும், குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கவும், நோதாஜி நெஞ்சாலையில் உயர்மின் கோபுர விளக்கை பழுது பார்க்கவும் ஒப்புதல் உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

நாமக்கல் புத்தகத் திருவிழாவை நீட்டிக்க கோரிக்கை

நாமக்கல், ஜன.31- நாமக்கல் 2 ஆவது புத்தகத் திருவிழாவை ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம், பதிப் பாளர், விற்பனையாளர் சங்கம் இணைந்து  நடத்தும் 2 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா விற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இப்புத்தகத் திருவிழா வில் 72 புத்தக அரங்குகள் அமைக்கப்பட் டுள்ளன. இவை தவிர, அரசுத்துறை சாா்ந்த 12  அரங்குகளும் இடம் பெற்றுள்ளன. லட்சக் கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள புத்தகங்களை வழங்குவ தற்காக பிரத்யேக பெட்டி ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது. கடந்த ஜன.26 ஆம் தேதியன்று தொடங்கிய புத்தகத் திருவிழா பிப்.2 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. ஒவ்வோர் நாளும் ஒரு சிறப்பு பேச்சாளர் புத்தகம் தொடர்பான தலைப்புகளில் பேசி வருகின்றனர். கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புத்தகத் திருவிழாவுக்கு வருகை புரிந்துள்ளனர். ரூ.12 லட்சம் வரை புத்தக விற்பனை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து பபாசி துணைத்தலைவர் யுவராஜ் கூறுகையில், நாமக்கல் மாவட்ட நிர் வாகம் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தி வருகிறது. வேறு எந்த மாவட்டத்தி லும் இல்லாத வகையில், இங்கு அரசுத்துறை ஊழியர்களுக்கு ரூ.200, ரூ.500 டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த டோக் கனை வழங்கி புத்தகங்களை பெற்றுச் செல் கின்றனர். இதற்கான செலவினத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்றுள்ளது. அதுமட்டுமின்றி, தனி யார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ரூ.100 டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அதனை வழங்கி புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். வரும் வெள்ளிக்கிழமை (நாளை) புத்தகத் திருவிழா நிறைவு பெறுகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர வேண்டும் என்ற கோரிக்கையை ஆட்சியரிடம் வைத்துள்ளோம், என்றார்.

2 டன் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

தருமபுரி, ஜன.31- லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்தி வரப்பட்ட 2 டன் குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர். தருமபுரி அருகே உள்ள சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த சரக்கு லாரி ஒன்றினை நிறுத்தி சோதனை செய்த னர். அப்போது, அந்த லாரியில் ரகசிய அறை அமைத்து குட்கா  பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து லாரி ஓட்டுநரான பெங்களூருவைச் சேர்ந்த முஜி புல்லா செரிப் என்பவரை தருமபுரி நகர போலீசார் கைது  செய்து, 2 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.  மேலும், இதில் தொடர்புடையவர்கள் யார் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் குடமுழுக்கு:  முன் ஏற்பாடுகள் தீவிரம்:

அவிநாசி, ஜன.31- அவிநாசியில் பிரசித்தி பெற்ற அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு பிப்.2 ஆம்  தேதி போக்குவரத்து மாற்றம் மற்றும் நெரிசலை தவிர்க்க வாக னங்கள் நிறுத்துவதற்கு ஏதுவான இடங்களை காவல்துறை யினர் அறிவித்துள்ளனர். மங்கலம் சாலையில் வரும் இரு சக்கர வாகனங்கள் பால முருகன் திருமண மண்டபம் எதிராக உள்ள காலியிடம், குமரன்  பேக்கரி காசி கவுண்டன் புதூர் கிங்டம் பள்ளி மைதானம்,  (விஐபி) நான்கு சக்கர வாகனங்கள் அவினாசிலிங்கேசுவரர் திருக்கோயில் தாமரை குளத்திற்கு எதிரில். கோவை சாலை யில் வரும் நான்கு சக்கர வாகனங்கள் அகரம் கார்டன்,  கடைவீதி கருணாம்பிகா ஹார்வோர்டு எதிராக உள்ள காலியி டம், இரண்டு சக்கர வாகனங்கள் எச்பி பெட்ரோல் பங்க் பின்பு றம். திருப்பூர் சாலையில் இருந்து வரும் இரண்டு சக்கர வாக னங்கள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நான்கு சக்கர  வாகனங்கள் நெடுஞ்சாலை துறை அலுவகத்திற்கு எதிராக.  சேவூர் சாலையில் வரும் இருசக்கர வாகனங்கள் குலாலர்  மண்டபம் ஜங்ஷன், நான்கு சக்கர வாகனங்கள் அவிநாசிலிங் கேசுவரர் திருக்கோவில்  நுழைவாயில் அருகில் உள்ள தேவர்  மண்டபம் (விவிஐபி) வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 

போக்குவரத்து மாற்றம்:

விழாவை முன்னிட்டு வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி ஒருநாள்  மட்டும்  காவல்துறையினர் போக்குவரத்து மாற்றம் செய்துள் ளனர். அதன்படி கோவையிலிருந்து அவிநாசிக்கு வரும் வாக னங்கள் அனைத்தும் கணிணி ரவுண்டானாவிலிருந்து சர்வீஸ்  ரோடு வழியாக கிருஷ்ணா பேக்கரி வந்து அவிநாசி புதிய  பேருந்து நிலையம் செல்லவும், அதேபோல, கோவையிலி ருந்து வந்து சேவூர், சத்தி, புளியம்பட்டி மற்றும் கோபி செல்லக் கூடிய வாகனங்கள் அவிநாசி கால்நடை மருத்துவமனை ஜங் சன் – முத்து செட்டிபாளையம் வழியாக செல்லவும், சேவூர்  சாலையிலிருந்து திருப்பூர், கோவை, ஈரோடு செல்லும் வாக னங்கள் முத்து செட்டிபாளையம் வழியாக சென்று கணிணி ரவுண்டானா வழியாகவும், மேட்டுப்பாளையம் மற்றும் அன் னூர் செல்லும் வாகனங்கள் ஆட்டையம்பாளையம் வழியாக  செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர் மற்றும்  ஈரோட்டிலிருந்து சேவூர், சத்தி, புளியம்பட்டி மற்றும் கோபி  செல்லக்கூடிய வாகனங்கள் அவிநாசி புதிய பேருந்து நிலை யம் ரவுண்டானாவிலிருந்து வலதுபுறம் திரும்பி அரசு ஆண் கள் மேல் நிலைப் பள்ளி ராயம்பாளையம் வழியாக சென்று  மடத்துப்பாளையம் ஜங்சன் (பண்ணாரி அம்மன் கோவில்)  வழியாகவும், திருப்பூர் மற்றும் ஈரோட்டிலிருந்து மேட்டுப்பா ளையம், அன்னூர் செல்லக்கூடிய வாகனங்கள் சர்வீஸ் ரோடு  வழியாகவே வேலாயுதம்பாளையம் சர்வீஸ் ரோடு ரவுண் டானா மற்றும் ஆட்டையம்பாளையம் வழியாக அன்னூர் செல்லவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவிநாசி டவுனில் இருந்து பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத் திலிருந்து மட்டும் தான் செயல்படும். அவிநாசி பொது மக்கள் மற்றும் வியாபாரிகள்  வாகனங்களை சாலையில் நிறுத் தவோ, விளம்பர பதாகைகளை சாலைகளில் வைக்கவோ கூடாது என காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். பக்தர்கள் கலச தீர்த்தம் : பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 9 மணி முதல் கோபுர கலசத்தி லிருந்து கலச  தீர்த்தம்  ட்ரோன் மூலமாக  மக்களுக்கு தெளிக் கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நல்லது நண்பர்கள் அறக்கட்டளை மேற்கொண்டுள்ளனர்.  மேலும், தற்காலிக கழிப்பறை வசதிகள் மங்கலம் சாலை யில், பள்ளிவாசல் பாலம் அருகில், கோவில் வளாகம் அரு கில், கோவை சாலையில் பேங்க் ஆப் இந்தியா அருகில்,  சேவூர் சாலையில் எல்டி பேங்க் அருகில், புது பேருந்து  நிலையம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, நெடுஞ்சாலை  துறை அலுவலகம் எதிரில் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபி ஷேகத்தை பார்ப்பதற்கு 6 இடங்களில் எல்இடி திரை ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

லாட்டரி சீட்டு விற்பனை: இருவர் கைது

திருப்பூர், ஜன.31- வெள்ளக்கோவிலில் உள்ள டாஸ்மாக் கடைகள், அதன்  பார்களுக்கு அருகே கடை வேலை நேரம் முடிந்த பிறகும் மது பானங்கள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து, வெள்ளக் கோவில் போலீஸார் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட் டனர். அப்போது சொரியங்கிணத்துப்பாளையம் அருகே மது பானம் விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சுதர் சன் (34) என்பவரைக் கைது செய்தனர். மேலும், அவரிடம்  இருந்து 7 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல புதுப்பையில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள்  விற்றுக் கொண்டிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த தண்ட பாணி மகன் மூா்த்தி (47) என்பவரை போலீஸார் கைது செய்த னர்.

மனைவி கொலை வழக்கு -  சிறை

கோவை, ஜன.31- மனைவியை கொலை செய்த குற்றவாளிக்கு ஐந்தாண்டு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா காவல்  நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் சக்தி வேல்(32). கடந்த 2019-ஆம்  ஆண்டு அவரது மனை வியை கொலை  செய்த குற் றத்திற்காக பொள்ளாச்சி தாலுகா காவல் நிலை யத்தில் சக்திவேல் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட் டது. இந்நிலையில், வழக் கின் மீதான விசாரணை கோவை மகிளா நீதிமன் றத்தில் நடைபெற்று வந்தது.  இவ்வழக்கின் விசாரணை புதனன்று முடிவு பெற்று, குற்றவாளி சக்திவேலுக்கு 5  ஆண்டு 6 மாதம் சிறைத ண்டனை மற்றும் ரூபாய் 2,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

சிறுதானிய மையங்கள் அமைக்க தொழில்முனைவோருக்கு அழைப்பு

ஈரோடு, ஜன. 31- வேளாண் துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக் கையில், உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள், கிராமப்புற இளைஞர்கள், வேளாண் தொழில்முனைவோர், வேளாண் உட்கட்டமைப்பு நிதி பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். தானியம்  சுத்தம் செய்யும் இயந்திரம், கல் மற்றும் தூசி நீக்கும் இயந் திரம், தோல் நீக்கும் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்தி ரம், தானியத்தை நிறம் பார்த்து பிரிக்கும் இயந்திரம், தானிய  மெருகூட்டும் இயந்திரம், போன்ற முதன்மை பதப்படுத்தும் இயந்திரங்களைத் தேவைகளின் அடிப்படையில் பெறலாம்.  இத்திட்டத்தில் இயந்திரங்களுக்கான அனுமதிக்கப்பட்ட மானிய சதவீதம் 75% அதிகபட்சமாக ரூ.18.75 லட்சம் ஆகும்.  விண்ணப்பதாரருக்கு நிறுவனத்தின் உரிமை இருக்க வேண்டும். தனியுரிமை, கூட்டாண்மை நிறுவனமாக இருக்க லாம். ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டுமே நிதி உதவி  பெற தகுதியுடையவர்.  விண்ணப்பதாரர் மாவட்ட அளவிலான ஆலோசகர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரின் உதவியின் மூலம் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வேளாண் உட்கட்டமைப்பு நிதி வலையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்தபட்சம் 10% இருக்க வேண்டும். மீதித் தொகை வங்கி மூலம் கடனாக பெற்று கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு வேளாண்மை துணை இயக்கு நர் (வேளாண் வணிகம்) அலுவலக எண்: 0424 - 2903889,  வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) : 87785 93957, 8883368510, 9952884821 ல் தொடர்பு கொள்ளலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநங்கை வெட்டிக்கொலை

கோவை, ஜன.31- கோவை தெலுங்கு பாளையம் பகுதியைச் சேர்ந்த வர் தனலட்சுமி என்கிற சோமசுந்தரம் (37). இவர் வட வள்ளி அடுத்த மருதமலை இந்திரா நகர் பகுதியில் உள்ள  மாசிலாமணி (33) என்ற திருநங்கை வீட்டிற்கு அடிக்கடி  வந்து சென்றுள்ளார். மேலும் மாசிலாமணி மற்றும் அவரு டன் தங்கி இருக்கும் மணி, தனலட்சுமி ஆகிய மூவரும் நெருங் கிய நண்பர்களாக உள்ளனர்.  இந்நிலையில் தனலட்சுமி மதியம் மாசிலாமணி வீட்டுக்கு வந்துள்ளார். மூவரும் வீட்டில் இருந்த நிலையில், மாசிலாமணி மற்றும் மணி இரு வரும் மாலை 4 மணிக்கு வெளியே சென்றுள்ளனர்.  பின்னர்  இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது தனலட்சுமி இரத்த வெள் ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து வடவள்ளி  போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின் றனர்.

டைமண்ட் வலை அமைக்க மானியம் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

கோவை, ஜன.31- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதனன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்,  கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வட்டாரம் மதுக்கரை  மற்றும் போளுவாம்பட்டி வன சரக பகுதிகளில் இருந்து காட் டுப்பன்றிகள் அதிக அளவில் தினம்தோறும் நூற்றுக்க ணக்கில் வந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வருகி றது.  இதனால் விவசாயிகள் பொருளாதார நஷ்டத்திற்கு தள் ளப்படுகிறார்கள். சோலார் மின் வேலிகள் அமைத்தாலும்  கூட்டம் கூட்டமாக பன்றிகள் வருவதால் கட்டுப்பாட்டுக்குள் வருவதில்லை. அண்டை மாநிலமான கேரளாவில், ஊராட்சி  மன்றத்தால் காட்டு பன்றிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டு சுட்டு கொன்று கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. தமிழ்நாட்டிலும் அமல்படுத்த கோரி, விவசாயி கள் பலமுறை குறைதீர் கூட்டத்தில் கூறியும், இது நாள்  வரை அரசு கண்டு கொள்ளவில்லை. எனவே 5 அடி அள வில் விவசாய பூமிகளை சுற்றி டைமண்ட் வலை அமைக்க   விவசாயிகளுக்கு மானியம் வழங்க தமிழக அரசுக்கு பரிந் துரை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

சிபிஎம் மூத்த தலைவர் டி.சேஷகிரி காலமானார்

சேலம், ஜன.31- எல்ஐசி இன்சூரன்ஸ் அரங்கத்தின் முன்னணி தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் டி.சேஷகிரி காலமானார். 1970களின் மத்தியில் ஆயுள் காப்பீட்டுக்கழகத்தில் பணிக்கு சேர்ந்து, இன்சூரன்ஸ் ஊழியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தில் உறுப்பினராக இணைத்துக்கொண்டு முன்னணியில் செயல்பட்டவர் தோழர் டி.சேஷகிரி. சங்கத்தின் முக்கிய தலைமை பொறுப்புகளுக்கு படிப்படியாக உயர்ந்த இவர் மீது, எதிர் சங்கத்தினர் பல்வேறு பொய்வழக்குகளை தொடுத்தனர். அதையெல்லாம் சட்டரீதியாகவும், ஊழியர்களை திரட்டியும் முறியடித்தார். மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம், நாமக்கல் ஒன்றுபட்ட மாவட்டக்குழு உறுப்பினராக நீண்டகாலம் சிறப்பாக செயல்பட்டவர். பணி ஓய்வுபெற்ற பின்பு, இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கத்தின் செயலாளராகவும், கட்சிப் பணிகளில் முழு நேரமும் ஈடுபட்டு வந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் துவங்கப்பட்டபோது சேலம் மாவட்டச் செயலாளராக செயல்பட்டார். தீக்கதிர் நாளேட்டினை சேலம் மாவட்டம் முழுவதும் கொண்டு செல்லும் விதத்தில், தீக்கதிர் நாளிதழின் ஏஜெண்டாக பல ஆண்டுகள் செயல்பட்டு வந்த தோழர் டி.சேஷகிரி புதனன்று காலமானார். அவரது மறைவிற்கு காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்டக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளன. தோழர் சேஷகிரியின் இறுதி நிகழ்ச்சி அவரது இல்லத்தில் வியாழனன்று (இன்று) மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது இரங்கல் கூட்டம் என்.138, பாரதி தெரு, திருமால் நகர், அழகாபுரம் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என காப்பீட்டு கழக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.