districts

img

சாதி பெயரில் உள்ள கிராமங்களின் பெயரை நீக்க வேண்டும்

தருமபுரி ஜூன் 27- சாதி பெயரில் உள்ள கிராமங்க ளின் பெயர்களை நீக்க வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர்கள் கலைஞர்கள் சங்கத் தின் தருமபுரி மாவட்ட 5ஆவது  மாநாட்டில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.  தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 5 ஆவது மாநாடு  அரூர் ஓய்வூதியர் சங்க அலுவல கத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எ.கொ.அம்பேத்கர் தலைமையில் நடைபெற்ற இந்த  மாநாட்டில், மாவட்ட நிர்வாகிகள் சுகந்திபாஸ்கர், முனைவர் கு. சிவப்பிரகாசம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். கிளை தலை வர் கவிஞர் ஆதிசெளந்தரராஜன் வரவேற்றார். முற்போக்கு எழுத் தாளர் சங்க பொறுப்பாளர் இரா. சிசுபாலன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செய லாளர் கவிஞர் நவகவி வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட நிர் வாகிகள் ப.மாதையன், ஊமை ஜெயராமன், லட்சுமி தீச்சுடர் ஆகி யோர் பேசினர். கவிஞர் ரவீந்திர பாரதி, எழுத்தாளர் அ.வெ.சாமிக் கண்ணு ஆகியோர் வாழ்த்தி பேசி னர்.  இதில், தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு சாதியின் பெயரில் உள்ள கிரா மங்களின் பெயர்களை நீக்கி பொது பெயர் சூட்டுவதில் பல் வேறு முயற்சிகளை எடுத்து வருகி றது. இதன் தொடர்ச்சியாக அரூர்  வட்டத்தில் சாதியின் பெயரில் செயல்படும் கிராமங்களின் பெயரை மாற்றி அமைக்க வேண் டும். மாவட்டத்தில் தனியார் பள்ளி களில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்  நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். அரூர் நூல் நிலை யத்தை அரசு கட்டிடத்தில் அமைத்து மேம்படுத்திட வேண் டும். தீர்த்தமலை சுற்றுலா தளத்தை மேம்படுத்த வேண்டும்.  ஒன்றிய அரசால் பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட் டுள்ள சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட்டை நிபந்தனை யின்றி விடுதலை செய்ய வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிர்வாகிகள் தேர்வு 

இதனையடுத்து மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். இதில், மாவட்ட தலைவ ராக எ.கொ.அம்பேத்கர், துணைத் தலைவர்களாக நவகவி, பேரா.கு.சிவப்பிரகாசம், மாவட்ட செய லாளராக ம.சிங்காரவேல், துணைச் செயலாளர்களாக சுகந்தி  பாஸ்கரன், சொ.கார்த்திக் ஆகி யோர் அடங்கிய 21 பேர் கொண்ட  மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட் டது. இறுதியில், மாநில செயற் குழு உறுப்பினர் இரா.தெ.முத்து நிறைவுறையாற்றினார்.  பின்னர், அரூர் அரசு ஆண் கள் மேல்நிலை பள்ளி அருகில் கலை இலக்கிய இரவு நடை பெற்றது. மாவட்ட தலைவர் எ. கொ.அம்பேத்கர் தலைமை வகித்தார். திரவிடர் கழகம் வழக் கறிஞர் மதிவதனி சிறப்புரையாற் றினார். கரிசல் குயில் சின்னசாமி யின் பாடல்கள் ,மொரப்பூர் பாரதி கலைக்குழுவின் பறை இசை மற் றும் கலைநிகழ்ச்சி நாடகம் நடை பெற்றது. தொடர்ந்து பள்ளி மாண வர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. பள்ளி மாணவர்களை பாராட்டி கவிஞர்கள்  நவகவி, ஆதிமுதல்வன், இ.கே.முருகன்  ஆகியோர் பரிசுகளை வழங்கி னர்.  முடிவில் கார்த்தி நன்றி கூறி னார்.