உடுமலை, ஜன.9- உடுமலை திருமூர்த்திமலை அடி வாரப் பகுதியில் உள்ள மலைவாழ் மக் கள் குடியிருப்பு பகுதிகளில் செவ் வாயன்று காலை முதல் பெய்த கன மழையால் குடியிருப்பு பகுதி முழு வதும் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளா கினர். திருமூர்த்திமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் 500க்கும் மேற் பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வரு கிறார்கள். இந்த குடியிருப்பு பகு தியை கடந்து தான் அமணலிங்கேஸ் வரர் கோவில் மற்றும் பஞ்சலிங்க அருவி போன்ற முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டும். பல நூறு ஆண்டுகள் இந்த பகுதி யில் குடியிருக்கும் மலைவாழ் மக் கள் குடியிருப்பில் உள்ள வீடுகள் குடி சையாகவும், தகர கொட்டகையாக வும், பழைய காரை வீடுகளாகவும் தான் உள்ளன. பல ஆண்டுகள் அரசி டம் வீடு கட்டி தர கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் இன்று வரை மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், செவ்வாயன்று பெய்த மழையால் குடியிருப்புப் பகுதி களில் மழைநீர் தேங்கியது. மேலும் சில குடியிருப்புகளுக்குள் மழை நீர் சென்று வீடுகள் சேதமாகின. மேலும், மழை நீர் வெளியே செல்ல முடியா மல் உள்ளது. திருமூர்த்திமலை பஞ்ச லிங்க அருவியில் காட்டாற்று வெள் ளம் ஏற்பட்டு அமணலிங்கேஸ்வரர் கோவில் பகுதிக்கு செல்ல முடியா மல் உள்ளதை பெரிது படுத்தும் அரசு அதிகாரிகள், நூறு ஆண்டுகளுக்கு மேல் அடிப்படை வசிதிகள் இல்லா மல் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் வீட்டில் குழந்தைகளு டன் உயிர் பயத்தில் வாழ்வதை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும், இப்பகுதியில் உட னடியாக வீடுகள் கட்டித்தர நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மழை வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.